விஜய்சேதுபதி இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி

0
346

விஜய்சேதுபதி இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி

நடிகர் விஜய்சேதுபதி ‘இந்தியை திணிக்க கூடாது’ என்று பேசியது குறித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று அளித்த பேட்டி

‘‘ஜவான் படத்துல விஜய்சேதுபதி வில்லனாக சிறப்பாக நடித்து இருக்கிறார். சப் டைட்டில் இல்லாமல் அதை பார்த்தால், அது இந்தியை திணிப்பதா? கற்றுகொடுப்பதா? அது விவாத பொருள். இந்தி உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா என்பதுதான் பாயின்ட். ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவன தயாரிப்பில் அவர் நடிக்கிறார். விஜய்சேதுபதி கருத்து எதுவும் சொல்லவில்லை. அது அவர் உரிமை. அவர் இந்தி, போஜ்புரி, தமிழ் என எதிலும் நடிக்கட்டும். அவர் உரிமை. அதே சமயம் கருத்துக்கு சொல்லும்போது இரண்டு பக்கமும் பார்க்கணும்.

தமிழகத்தில் பல நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் இந்தியா முழுக்க ,வட இந்தியாவில் இருந்துஆட்களை வேலைக்கு எடுக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தைவிட பெங்களூர் ஓகே. அங்கே மொழி பிரச்னை இல்லை. இங்கே தமிழில்தான் பேச வேண்டியது இருக்கிறது என்கிறார்கள். இதுபோன்ற மொழி பிரச்னையால் தமிழகத்தில் முதலீடு வாய்ப்புகள் குறைகிறது. இந்தி விருப்பம் இருந்தால் படியுங்க. வேண்டாம் என்றால் விட்டுவிடுங்க.

நாங்க 3 மொழி கொள்கையை சொல்றோம். இந்திபடியுங்கனு மோடி சொல்லவில்லை. கட்டாயம், தமிழ், ஆங்கிலம் படிக்கணும். 3வது மொழியாக உங்களுக்கு தேவைப்படும் மொழியை படியுங்க என்கிறோம். இது எங்க கருத்து, விஜய்சேதுபதிக்கு பதில் அல்ல, 4, 5 மொழி கூட படியுங்க. நாளைக்கு நீங்க குளோபல் சிட்டிசன். நாளை வெறும் 2 மொழிவைத்துக்கொண்டு எங்கேயும் போக முடியாது. கூடுதல் மொழி தேவை. இந்தி பிடிக்காவிட்டால் பிரெஞ்சு, ஜெர்மன் படித்து ஐரோப்பாவில் வேலை செய்யுங்க.

இந்தியை நாங்க திணிக்கவில்லை. அதேசமயம், விஜய்சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா? இந்தி தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கலாமானு கேட்கமாட்டோம். அவர் அவரின் தனித்திறமை. அவர் விருப்பம். நாங்க ஏதாவது சொன்னால் தவறாக போய்விடும். அவர் படத்தைநாங்க கைதட்டி ரசித்துவிட்டு போறோம்.