காந்தாரா திரை விமர்சனம் : காந்தாரா – அசத்தலான கரடுமுரடான கிராமிய கதை – அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று | ரேட்டிங்: 4/5
நடிகர்கள் – கதாபாத்திரங்கள்:
ரிஷப் ஷெட்டி – காடுபெட்டு சிவா
கவுடா – லீலா
கிஷோர் – முரளிதர்
அச்சுயுத் குமார் – தேவேந்திர சுட்டூரு
ப்ரமோத் ஷெட்டி – சுதாகரா
ஷனில் குரு – புல்லா
பிரகாஷ் துமிநாட் – ராம்பா.
தொழில் நுட்பகலைஞர்கள்:
எழுத்து மற்றும் இயக்கம் – ரிஷப்ஷெட்டி
இசை – டீ.அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு – அரவிந்த் எஸ் காஷ்யப்
படத்தொகுப்பு – கே.எம் பிரகாஷ் | பிரதீக் ஷெட்டி
நிர்வாக தயாரிப்பு – கார்த்திக்
தயாரிப்பாளர் – விஜய் கிரகந்தூர்
நிறுவனம் – ஹோம்பாலே பிலிம்ஸ்
வெளியீடு – எஸ் ஆர் பிரபு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
மக்கள் தொடர்பு – யுவராஜ்
150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மன்னர் அந்த நிலத்தை கிராம மக்களுக்கு வழங்கிய தென் கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது.1847ஆம் ஆண்டு கர்நாடகாவின் குந்தாப்பூர் கிராமத்தில் நடக்கும் கதைக்களமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் பகுதியின் அரசன் அமைதி இல்லாத வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்கிறார், அவர் ஒரு காட்டின் அருகே ஒரு தெய்வத்தைக் காணும்போது, இறுதியாக அமைதியை அடைகிறார். அங்குள்ள கிராம மக்களுடன் ஒப்பந்தம் செய்து, வன நிலங்களை தெய்வத்திற்காக மாற்றிக் கொள்கிறார். கதை 1970களில் நுழைகிறது. ராஜாவின் வாரிசுகள் நிலங்களைத் திரும்பக் கோரும்போது சிக்கல் தொடங்குகிறது. ஒரு நாள் அரசனின் வாரிசு அங்கு நடக்கும் பாரம்பரிய கோலத்தில் கடவுள் வேடமிட்டவரை அவமதிக்கிறார். வன நிலம் ஒரு காலத்தில் தனது முன்னோர்களுக்குச் சொந்தமானது என அவர் கூறுகிறார். அவர் உண்மையில் கடவுள் என்றால் காட்டு என்று கேலி செய்கிறார். பிறகு கடவுள் என்று அழைக்கப்பட்டவர் காட்டுக்குள் சென்று மறைந்து விடுகிறார். இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, அரசனின் வாரிசு நீதிமன்றப் படிகளில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். பின்னர் கதை 90களில் நுழைகிறது. அரசரின் பரம்பரையைச் சேர்ந்த கிராமத்தின் சாஹிப் (அச்யுத் குமார்) காட்டில் உள்ள மக்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த சிவன் (ரிஷப் ஷெட்டி) ஒரு குறும்புக்காரன் மற்றும் அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்க்கிறார். இந்நிலையில் ஒரு நேர்மையான வன அதிகாரி முரளிதர் (கிஷோர்) அந்த நிலத்தில் மரம் வெட்டுதல் மற்றும் வேட்டையாடுவதைத் தடுக்க முயற்சிக்கிறார், அது இப்போது காப்புக்காடாக உள்ளது. வன நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி, வன நிலங்களை எல்லை நிர்ணயம் செய்து காலி செய்யும் முயற்சியில் வன வரம்பு அலுவலர் கிஷோர் குமார் ஈடுபட்டுகிறார்.விஷயங்களை சிக்கலாக்கும் வகையில், அந்த நிலம் தங்களுக்கு ஒரு வரமாக – காடுகளின் தேவதையான பாதுகாவலரின் வரமாக கொடுக்கப்பட்டதாக கிராம மக்கள் நம்புகிறார்கள், எனவே இந்த வெளியாரின் பேச்சைக் கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. கிராம மக்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. சிவன் அவர்களை எதிர்க்கிறார். இந்த பின்னணியில் சிவன் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதே சமயம் கோலத் திருவிழாவில் கடவுள் வேடம் அணிந்த சிவனின் தம்பி குருவா ஒரு நாள் கொல்லப்படுகிறார். சிவனின் தம்பி குருவை கொன்றது யார்? வன அலுவலர் கிஷோர் குமார், சிவனுக்கு இடையே நடந்த சண்டை என்ன விளைவுகளை ஏற்படுத்தியது? கிராமத்தின் சாஹிப் மக்களுடன் இணக்கமாக இருக்கும் காரணம் என்ன? விஷ்ணுவின் வராஹ அவதாரம் ஏன் அடிக்கடி சிவனை தொந்தரவு செய்கிறது? துன்மார்க்கர்களின் பிடியிலிருந்து சிவன் எப்படி கிராம மக்களை காப்பாற்றினார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் மீதிக்கதை.
ரிஷப் ஷெட்டி – காடுபெட்டு சிவா
கவுடா – லீலா
கிஷோர் – முரளிதர்
அச்சுயுத் குமார் – தேவேந்திர சுட்டூரு
ப்ரமோத் ஷெட்டி – சுதாகரா
ஷனில் குரு – புல்லா
பிரகாஷ் துமிநாட் – ராம்பா.
தொழில் நுட்பகலைஞர்கள்:
எழுத்து மற்றும் இயக்கம் – ரிஷப்ஷெட்டி
இசை – டீ.அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு – அரவிந்த் எஸ் காஷ்யப்
படத்தொகுப்பு – கே.எம் பிரகாஷ் | பிரதீக் ஷெட்டி
நிர்வாக தயாரிப்பு – கார்த்திக்
தயாரிப்பாளர் – விஜய் கிரகந்தூர்
நிறுவனம் – ஹோம்பாலே பிலிம்ஸ்
வெளியீடு – எஸ் ஆர் பிரபு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
மக்கள் தொடர்பு – யுவராஜ்





கே.எம். பிரகாஷ் பிரதிக் ஷெட்டியின் எடிட்டிங் கச்சிதம். இவர்கள் மூவரின் காம்போ படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

மொத்தத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள காந்தாரா – அசத்தலான கரடுமுரடான கிராமிய கதை – அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.