ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தென்காசியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்!
தென்காசி மாவட்டம், ஆனைக்குளம் பஸ் ஸ்டாப் முன்பு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் 200க்கும் மேற்பட்டோர்களுக்கு சமூக இடை வெளியுடன் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஓருங்கினைப்பாளர் சிவா முன்னிலை வகித்தார் மற்றும் நிர்வாகிகள் செய்யதலி, சிவக்குமார், இஸ்மாயில், முத்துக்குமார், ரியாஸ், முருகன் , அன்வர், ஆசிக், பலரும் உடன் இருந்தனர்,