சமரா திரைப்பட விமர்சனம் : சமரா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் புலனாய்வு திரில்லர் | ரேட்டிங்: 3/5

0
364

சமரா திரைப்பட விமர்சனம் : சமரா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் புலனாய்வு திரில்லர் | ரேட்டிங்: 3/5

Peacock Art House என்ற பட நிறுவனம் எம்.கே. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா”.

ஆண்டனி ஜேயாக ரஹ்மான்
டாக்டர் ஜாகீர் ராசா கானாக பரத்
ஜானியாக சஞ்சனா திபு
டாக்டர் ஆலன் மோசஸாக பினோஜ் வில்லியா
டாக்டர் ஆசாத் ஆக ராகுல் மாதவ்
ஏசிபி செந்தில் குமாவாக கோவிந்த் கிருஷ்ணா
எஸ்ஐ அபயாக டினிஜ்
தேனாக விவியா சாந்த்
மிலன் பாவாவாக வீர் ஆரியன்
ஜேம்ஸாக தினேஷ் லம்பா
கீதாவாக சோனாலி சூடான்
பாதிரியார் ஆபிரகாமாக டேரிஷ் சினாய்
ஐஜி கிஷோராக டாம் ஸ்காட்
சூரியாக பிஷால் பிரசன்னா
தொழில்நுட்பகலைஞர்கள் :
ஒளிப்பதிவு – சினு சித்தார்த்
இசை – தீபக் வாரியர்
பின்னணி இசை – கோபி சுந்தர்
பாடல்கள் – எடிட்டிங் –பாப்பன்
ஸ்டண்ட் – தினேஷ் காசி
நடனம் – டேனி பவுல்
தயாரிப்பு –  ஆ.மு. சுபாகரன், அனுஜ் வர்கீஸ்.
கதை, திரைக்கதை, இயக்கம் – சார்லஸ் ஜோசப்.இமயமலைப் பகுதியில் ஒரு பனி பள்ளத்தாக்கில் இரண்டு கொலைகள் நடக்கின்றன. மேலும் ஒரு தீவிரவாதி தப்பியோடியதாக கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த பயங்கரவாதி உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். மறுபுறம், ஆலன் ஒரு ராணுவ மருத்துவர். ராணுவ நடவடிக்கை ஒன்றில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, வடு மற்றும் அவர் தனது வெளிப்புற அழகை இழக்கிறார். அவரது மனைவி அவரை விவாகரத்து செய்த பிறகு, ஹிமாச்சலில் தனிமையில் வாழும் இந்த முன்னாள் ராணுவ மருத்துவர் அவரது மகள் ஜானி தான் அவருக்கு எல்லாம், அவர் ஜானியை மீண்டும் தன்னிடம் அழைத்துச் செல்ல தயாராக இருந்தபோது, அவள் பனியில் ஒரு விபத்தை சந்திக்கிறாள், அதில் ஒரு வைரஸால் அவளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கொலைக்களுக்கான காரணத்தை அறிய ஆண்டனி உள்ளிட்ட போலீஸ் டீம் ஒரு தொடர் மரணம் குறித்து விசாரணை நடத்தும் போது, அவர்களுடன் டாக்டர் ஆலனும் டாக்டர் ஜாகிரும் சேர்ந்து வரும்போது படத்தின் போக்கு முற்றிலும் மாறுகிறது. அதாவது, அறிவியலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு சமூகம், நோயைப் பரப்பும் வைரஸுடன் சேர்ந்து பயோ-வார் ஏற்படுத்தி உலகை அழிக்கத் தயாராக இருக்கும் ஒரு பெரிய பயங்கரவாத குழு செயல்படுகிறது. இது ஒரு பெரிய அளவிலான நிகழ்வின் ஆரம்பம் என்று ஆண்டனி சந்தேகிக்கிறார். டாக்டர் ஆலன் தனது பாதிக்கப்பட்ட மகளைக் கொடிய வைரஸ் நோயிலிருந்து காப்பாற்றினாரா? அதிகாரி ஆண்டனியுடன் சேர்ந்து அந்த கொடிய வைரஸ் வெடிப்பை தடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ரஹ்மான் ஆன்டனி  என்ற துப்பறியும் நபராக ஸ்டைலான மேனரிஸங்களை ஏற்று வசீகரமாக காட்டியிருக்கிறார்.
இராணுவத் தாக்குதலின் போது உடம்பு பாதிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட முன்னாள் இராணுவ மருத்துவர் ஆலனாக,  பினோஜ் வில்லியா சிறப்பாக செய்துள்ளார். உண்மையில் இவருக்குத் தான் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம், மேலும் பிரமிக்க வைத்த செயற்கை ஒப்பனையில் அவருடைய செயல்திறன் அருமையாக இருக்குறது.
விஞ்ஞானி ஜாகீர் ராசா கானாக பரத், ஜானியாக சஞ்சனா திபு, டாக்டர் ஆசாத் ஆக ராகுல் மாதவ், ஏசிபி செந்தில் குமாவாக கோவிந்த், கிருஷ்ணா எஸ்ஐ அபயாக டினிஜ், தேனாக விவியா சாந்த், மிலன் பாவாவாக வீர் ஆரியன், ஜேம்ஸாக தினேஷ் லம்பா, கீதாவாக சோனாலி சூடான், பாதிரியார் ஆபிரகாமாக டேரிஷ் சினாய், ஐஜி கிஷோராக டாம் ஸ்காட், சூரியாக பிஷால் பிரசன்னா உள்ளிட்டோர் முறையே இந்த கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
தீபக் வாரியர் இசை மற்றும் கோபி சுந்தரின் பின்னணி இசை பதற்றத்தை உயர்த்தி படத்துக்கு கூடுதல் பலம்; சேர்க்கிறது.
அசத்தலான கேமரா கோணங்களில் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் பிரமாதமான காட்சிகளை வெளிக்கொணர்ந்து உள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தின் பனி மூடிய மலைகள் ஆகியவை படத்திற்கு ஒரு அழகியல் ஈர்ப்பை வழங்கியதுடன், அவருடைய ஸ்டைலிஸ்டிக் காட்சி அணுகுமுறை சில அழகியல் மதிப்பைச் சேர்க்கிறது,
பாப்பன் எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் த்ரில்லிங்கா இருந்திருக்கும்.
அறிவியல் உலகம் எதிர்நோக்கும் ஒரு பயங்கரமான நோய், அதை மறைத்து உலகை அழிக்க திட்டமிடும் தீய சக்திகள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல இவை இரண்டும் இணைந்தால் உலகில் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து, நோய் பரவலை அதிகப்படுத்தும் வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவினால் மனித வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை ரசிகர்களை சிந்திக்க வைக்கும் படமாக படைத்துள்ளார் இயக்குனர் சார்லஸ் ஜோசப்.
மொத்தத்தில் Peacock Art House சார்பில் எம்.கே.சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள சமரா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் புலனாய்வு திரில்லர்.