சத்திய சோதனை திரைப்பட விமர்சனம் : ‘சத்திய சோதனை’ பார்வையாளர்களை சிரிக்கவும் மற்றும் சிந்திக்கவும் வைக்கிறது.| ரேட்டிங்: 2.5/5

0
423

சத்திய சோதனை திரைப்பட விமர்சனம் : ‘சத்திய சோதனை’ பார்வையாளர்களை சிரிக்கவும் மற்றும் சிந்திக்கவும் வைக்கிறது | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்:
பிரேம்கி அமரன் – பிரதீப்
ஸ்வயம் சித்தா – பிரவீணா
ரேஷ்மா – அன்னம் (பிரதீப் சகோதரி)
சித்தன் மோகன் – குபேரன்
செல்வ முருகன் – மகாதேவன்
ஹரிதா – மகாலட்சுமி
பாரதி – முப்பிடாதி
ராஜேந்திரன் – உளவாளி ராமர்
ஞானசம்பந்தம் – நீதிபதி
முத்துப்பாண்டி – இசக்கி
கர்ண ராஜா – செல்வராஜ் (பிரதீப் மாமா)
தயாரிப்பு: சமீர் பாரத் ராம்
தயாரிப்பு: சூப்பர் டாக்கீஸ்
எழுதி இயக்கியவர் : சுரேஷ் சங்கையா
ஒளிப்பதிவாளர்: ஆர்.வி. சரண்
எடிட்டர்: வெங்கட் ராஜன்
கலை இயக்குனர்: வாசுதேவன்
பாடல் வரிகள்: வேல்முருகன்
இசை: ரகு ராம். எம்
பின்னணி இசை: தீபன் சக்கரவர்த்தி
பாடியவர்கள்: கங்கை அமரன், வீரமணி ராஜு, திவாகர்
வசனங்கள்: வி.குருநாதன் மற்றும் சுரேஷ் சங்கையா
வண்ணம்: அஜித் வெடி பாஸ்கரன்
Sfx   : சதீஷ்
கலவை: ராஜா நல்லையா
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

ஒரு காவல் நிலையத்தை மையமாக கொண்டு நடக்கும் கதையாக சத்திய சோதனை படம் அமைந்துள்ளது. தங்க நகைகளை விரும்பும் ஒரு அதிகாரம் படைத்த கிராமத்து நபர் கண்மாயில் கொலை செய்யப்படுவதுடன் படம் துவங்குகிறது. தன் காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஹீரோ பிரதீப் (பிரேம்ஜி) அந்த கொலை செய்யப்பட்ட நபரின் உடலை பார்க்கிறார். பதட்டம் அடையாமல் உடலை ஒரு ஓரமாக இழுத்து வைத்துவிட்டு அதில் இருந்த போன், வாட்ச் மற்றும் ஒரு சிறிய தங்க நகையை எடுத்து ஊரில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார். வழியில் மூதாட்டி ஒருவரை சந்தித்து கொலை நடந்த விஷயத்தை கூறி அந்த மூதாட்டியை ஊரில் விடுவதாக கூறி ஏற்றிச் செல்கிறார். பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்ல, அவர் தனது கடமையைச் செய்ததற்காக அவரைப் பாராட்டுவதற்கு பதில், கொலை செய்யப்பட்டவர் இறக்கும் போது ஏராளமான தங்கச் சங்கிலிகள் அணிந்திருந்தார் என்பதை அறிந்த போலீசார், காணாமல் போன மற்ற கனமான தங்கச் சங்கிலிகளைப் பற்றி அவரிடம் விசாரிக்கிறார்கள். அந்த கொலை தொடர்பான விசாரணையில் பிரேம்ஜி அமரன் சிக்கிக் கொள்வது, அதன் பின்னால் நடைபெறும் காட்சிகள் என கலகலப்பாக முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்வதே ‘சத்திய சோதனை’ படத்தின் கதை

பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் பிரேம்ஜி, எப்போதும் தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறிக்கொள்ளும் பிரேம்ஜியின் திருட்டு முழி, மற்றும் இன்றைய சமுதாயத்தில் நேர்மையானவனாக இருக்கும் அப்பாவி கதாபாத்திரத்தில் வழக்கத்திற்கு மாறாக நடிப்பில் அசத்தியுள்ளளர். காவல்துறையின் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்து அங்கு சென்றால், காவல்துறையினரின் சந்தோகத்திற் குறியவராக சிக்கி, அந்த நபர் படும் அவஸ்தைகளை ‘’கடந்த சில நாட்களாக காவல் நிலையத்தில் பல முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொண்டேன். உங்களுடையது அல்லாத ஏதேனும் ஒன்றை நீங்கள் தரையில் கண்டால், அதை ஏதேனும் ஒரு குழியில் எறிந்துவிட்டு, அதை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து புகாரளிக்காமல் உங்கள் வழியில் செல்லுங்கள்’’ என்று தனது நக்கலான பாணியில் வசனம் பேசி சிறப்பான நடிப்பின் மூலம் பொது மக்களை எச்சரித்துள்ளார்.

பொதுவுடைமை மற்றும் தனியுடமை பற்றி ரசிக்கும் படியாகவும், சிந்திக்கும் படியாகவும் பேசுகிறார் நீதிபதியாக வரும் ஞானசம்பந்தன், காதலி பிரவீணா (ஸ்வயம் சித்தா), பிரதீப் சகோதரி அன்னம் (ரேஷ்மா), கான்ஸ்டபிள் குபேரன் (சித்தன் மோகன்), மகாதேவன் (செல்வ முருகன்), மகாலட்சுமி (ஹரிதா), முப்பிடாதி (பாரதி),  உளவாளி ராமர் (ராஜேந்திரன்), இசக்கி (முத்துப்பாண்டி), பிரதீப் மாமாவாக செல்வராஜ் (கர்ண ராஜா) ஆகியோர் எளிமையான கதையில் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இவர்களது நகைச்சுவை கலந்த பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

குறிப்பாக ஆவுடையம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கும் பாட்டி ஒரு யதார்த்தமான கிராமத்து பாட்டியை பிரதிபலித்து நடிப்பில் தூள் கிளப்பியுள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள வி.குருநாதன் மற்றும் சுரேஷ் சங்கையா இருவரின் வசனங்கள் அற்புதமாகவும் சிந்திக்க கூடியதாகவும் அமைந்துள்ளது.

வேல்முருகன் பாடல் வரிகள், எம்.ரகுராம் இசை, தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை ஆர்.வி. சரணனின் ஒளிப்பதிவு, வெங்கட் ராஜனின் படத்தொகுப்பு, வாசுதேவனின் கலை என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு கவனம் ஈர்த்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் வழியில் ஏதேனும் சம்பவத்தை பார்த்தால், காவல் நிலையத்திற்கு சென்று அந்த சம்பவத்தை பற்றி கூறினால் அவர்கள் நிலைமை என்ன ஆகும் என்பதையும், காவல்துறையில் நிலவும் திறமையின்மை மற்றும் ஊழல் நிலையை அம்பலப்படுத்தும் விதம் அதிக லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அதை புத்திசாலித்தனமாகவும் நகைச்சுவையாகவும் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கய்யா.

மொத்தத்தில், ‘சத்திய சோதனை’ பார்வையாளர்களை சிரிக்கவும் மற்றும் சிந்திக்கவும் வைக்கிறது.