ஒ மை டாக் விமர்சனம்: ஒ மை டாக் கோடைக் காலத்தில் குழந்தைகளை குஷி படுத்தி கொண்டாடலாம் | ரேட்டிங் – 3/5

0
86

ஒ மை டாக் விமர்சனம்: ஒ மை டாக் கோடைக் காலத்தில் குழந்தைகளை குஷி படுத்தி கொண்டாடலாம் | ரேட்டிங் – 3/5

ரியல் தாத்தா- மகன் –பேரனாக இருக்கும் விஜயகுமார், அருண் விஜய், ஆர்னவ் ஆகிய மூவர் அதே உறவுடன் ரீலிலும் நடித்திருக்கும் படம் ‘ஓ மை டாக்’. 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் ஒ மை டாக் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்  சரோவ் சண்முகம். அமேசான் பிரைம் வீடியோ ஒடிடி தளத்தில் இப்படத்தை காணலாம்.
இதில் அருண் விஜய், ஆர்னவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார், வினய் ராய், பானு சுந்தர், ஏ.வெங்கடேஷ், மனோபாலா, சுவாமிநாதன், ப்ரியா ராஜ்குமார், ஷ்ரவன், பென்னி, சித்தி, க்ரித்திக், ஜான்கி, ஸ்பைக் ஜான்,மீப்பு ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கோபிநாத், இசை-நிவாஸ் கே.பிரன்னா, படத்தொகுப்பு-மேகநாதன், கலை-மைக்கேல், பாடல்கள்-சூப்பர் சுப்பு, பாலாஜி, மோகன், சரஸ் மேனன், சண்டை-சில்வா, ஆடை-வினோதினி பாண்டியன், தலைமை தயாரிப்பு மேற்பார்வை-செந்தில் குமார், இணை தயாரிப்பு-ராஜ்சேகர் கற்பூரசுந்திரபாண்டியன், பிஆர்ஒ-யுவராஜ்.

மனைவி மகிமா, மகன் ஆர்னவ் மற்றும் தந்தை விஜய்குமார் ஆகியோருடன் ஊட்டியில் வசிக்கிறார் அருண் விஜய். நடுத்தர குடும்பம் என்பதால் அருண்விஜய் வீட்டின் மேல் கடன் வாங்கி உலகத்தர பள்ளியில் ஆர்னவை படிக்க வைக்கிறார். இதனிடையே ஊட்டியில் பெரிய பணக்கரரான வினய் விலையுயர்ந்த நாய்களை வாங்கி வளர்த்து பயிற்சிகள் கொடுத்து பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதே பொழுதுபோக்காக கொண்டவர். ஆறு போட்டிகளில் வென்றிருந்தாலும் ஏழாவதாக வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைக்க அதி தீவரமாக இருக்கிறார்.தன்னிடம் உள்ள அஸ்கி வகை நாய் குட்டிகளில் ஒன்று கண் தெரியாமல் இருப்பதை பார்த்து, அதை கொன்று விடும்படி தன் அடியாட்களிடம் சொல்கிறார். அவர்கள் அந்தக் குட்டியை எடுத்துச் செல்லும் போது தொலைந்து விட, அந்தக் குட்டி அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அந்த கண் தெரியாத நாய்குட்டியை சிம்பா என்று பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து. அர்னவ் பயிற்சியும் கொடுக்கிறார். பின்னர் வளர்ந்தவுடன் கண் ஆபரேஷன்  செய்து கண் பார்வை கிடைக்க வழி செய்கிறார். ஊட்டியில் நாய்களுக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெறுவதை அறிந்து சிம்பாவை அர்னவ் அதில் கலந்து கொள்ளச் வைக்கிறார். அதில் சிம்பா மூன்றாவதாக வென்று இறுதி போட்டிக்கு செல்கிறது. இதனால் கோபமடையும் பணக்கார வினய் சிம்பாவை போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க பல வழிகளில் முயற்சி செய்கிறார்.  இந்த நெருக்கடிகளை தாண்டி ஆர்னவ் சிம்பாவை எப்படி காப்பாற்றினார்? இதிலிருந்து சிம்பா மீண்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதா? என்பதே மீதிக்கதை.

தன் மகன் அர்னவ் விஜய்க்காக விட்டு கொடுத்து தந்தைக்குகேற்ற பங்களிப்பை அளவோடு கச்சிதமாக கொடுத்து அண்டர்பிளேவும் செய்திருக்கிறார் அருண் விஜய். அருண் விஜய் ஜிம் உடலுடன், ஹேர்ஸ்டைலுடன், சில நிமிடங்களே வந்தாலும் அந்த சூப்பர்ஹீரோ காட்சிகள் செம்ம!

அர்ஜுனாக அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் அறிமுகமாகியிருக்கிறார்.  குழந்தைத்தனம் நிறைந்த வேடத்துக்கு அவர் சரியாக பொறுந்துகிறார். எமோஷனல் காட்சிகளில் அர்னவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடன் ஈடு கொடுத்து சைபீரியன் அஸ்கி வகை நாயும் நன்றாக நடித்துள்ளது.

அருண் விஜய்க்கு தந்தையாக விஜயகுமார் பாசக்கார குணத்துடன் மனதில் நிற்கிறார். ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை நடிகர்களையும் திரையில் காணமுடிகிறது.

தாயாக மகிமா நம்பியார் நடுத்தர குடும்பத்தலைவியாக,ஸ்டைலிஷ் வில்லனாக வினய் ராய், பானு சுந்தர், ஏ.வெங்கடேஷ், மனோபாலா, சுவாமிநாதன், ப்ரியா ராஜ்குமார், ஷ்ரவன், பென்னி, சித்தி, க்ரித்திக், ஜான்கி, ஸ்பைக் ஜான்,மீப்பு ஆகியோர் படத்தில் எந்தக் குறையுமில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

குழந்தைகளையும், நாய்களையும் ஒருங்கிணைத்து காட்சிக்கோணங்களை அமைத்து வித்தியாசமாக ஒளிப்பதிவு செய்து ஊட்டியில் எழிலையும், இயற்கை சூழ்நிலையையும் கண் முன்னே நிறுத்தி கடின உழைப்போடு அசத்தியுள்ளார் கோபிநாத். நாய்களுக்கான அவரது ஃப்ரேம்கள் ஈர்க்கிறது.

சூப்பர் சுப்பு, பாலாஜி, மோகன், சரஸ் மேனன் ஆங்கில பாடல் வரிகளில்  தமிழ் மெட்டோடு இசையை குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் கொடுத்து. பின்னணி இசையையும் இசையும் பியூட்டிஃபுல்.

தோய்வில்லாத கச்சிதமான படத்தொகுப்பு மேகநாதன், இயல்பான செட்களை அமைத்துள்ள கலை இயக்குனர் மைக்கேல்,சண்டை-சில்வா என்று அனைவரும் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

குழந்தைகள் படத்தில் ஒரு நாய் என்பதால் முழு கவனத்தையும் நாயின் பக்கம் திருப்பிவிடாமல், குழந்தைகளுக்கும் அவர்தம் குடும்பப் பின்னணிக்கும் நிறைய காட்சிகளை ஒதுக்கி, எந்தவித ஹீரோயிசமும் பெரிதாக இல்லாத கதை. ‘ஊனமாக இருந்தால் இந்த உலகத்தில் வாழத் தகுதியில்லை என்பது முற்றிலும் தவறு. அன்பிருந்தால் எதையும் சாதிக்க முடியும்’ என்ற கருத்தை வைத்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் சரோவ் சண்முகம்.

மொத்தத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் ஒ மை டாக் கோடைக் காலத்தில் குழந்தைகளை குஷி படுத்தி கொண்டாடலாம்.