பாலிவுட் படவுலகம் பற்றி அதிர்ச்சியான கருத்தை பகிர்ந்த நடிகை பாக்யஸ்ரீ

0
126

பாலிவுட் படவுலகம் பற்றி அதிர்ச்சியான கருத்தை பகிர்ந்த நடிகை பாக்யஸ்ரீ

பாலிவுட் குறித்து மூத்த நடிகை பாக்யஸ்ரீ பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பான் இந்தியா படமான ராதேஷ்யம் மூலம் மூத்த நடிகை பாக்யஸ் ரீ-என்ட்ரி ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. 80 மற்றும் 90களில் பாலிவுட்டின் நட்சத்திர நாயகியாக இருந்தவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். ராதேஷ்யம் படத்தில் பிரபாஸின் அம்மா வேடத்தில் மீண்டும் வெள்ளித்திரையில் காணப்படுகிறார். ராதேஷ்யாம் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், திரைப்பட விளம்பரத்தின் ஒரு பகுதியாக மீடியாக்களுடன் காணப்பட்டார். இந்நிலையில் பாக்யஸ்ரீ, பாலிவுட்டில் தற்போது பழைய கதைகள், காப்பி ஸ்கிரிப்ட்கள் எல்லாம் வந்து கொண்டிருப்பதாக அதிர்ச்சியான கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் தெலுங்கு மலையாள இண்டஸ்ட்ரியில் புதிய ஸ்கிரிப்ட்களும், புதிய கதைகளும் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார். புதிய திறமைகள் மற்றும் OTT தளங்களுடன், சினிமாவின் நிலை நாளுக்கு நாள் சர்வதேச மட்டத்திற்கு மாறி வருவதாகவும், மக்கள் இப்போது பான் இந்தியா திரைப்படங்களையும் அது போன்ற கதைகளையும் விரும்புவதாகவும் அவர் கூறினார். மொழி வேறுபாடின்றி ஒரு நல்ல திரைப்படத்தை பார்வையாளர்கள் பாராட்டுகிறார்கள் என்றும், இளம் தலைமுறையினரிடமிருந்து புதிய கதைகள் மற்றும் புதிய திரைப்படங்கள் வருவதாகவும் அவர் கூறினார். அதனால் தான் நியூ டேலண்ட் மக்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.