நாளை வெளியாகிறது ‘அரண்மனை 3’ படத்தின் ட்ரைலர்

0
19

நாளை வெளியாகிறது ‘அரண்மனை 3’ படத்தின் ட்ரைலர்

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள அரண்மனை-3 திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வசூல் ரீதியாக வெற்றி கண்டது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி, வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் ராஷி கண்ணா, விவேக், சாக்‌ஷி அகர்வால், மனோபாலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் ஆர்யாவுடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக யு.கே.செந்தில்குமார், இசையமைப்பாளராக சத்யா, எடிட்டராக பென்னி ஆலிவர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.