Chennai City News

வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 9 வயதான பெண் சிங்கம் உயிரிழந்தது. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட 8 சிங்கங்களில் 2 சிங்கங்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு, பேட்டரி கார் மூலம் சென்று சிங்கங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விலங்குகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

Exit mobile version