திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் தகவல் தொடர்புத் திறன் குறித்த சர்வதேசப் பயிலரங்கு நடைபெற்றது
சென்னை, திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆங்கில மொழித் துறை சார்பில் ஆங்கில மொழியில் தகவல் தொடர்புத் திறன் குறித்த சர்வதேசப் பயிலரங்கு இன்று நடைபெற்றது.
இதில் போலந்தின் சிடெல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் எவெலினா சுவெட்சுக் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
போலந்தின் சிடெல்ஸ் பல்கலைக்கழகத்துடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்பயிலரங்கு நடைபெற்றது.