தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்: தி கிரேட் இந்தியன் கிச்சன், இது இன்றைய பெண் சமுதாயம் தடங்கல்களை கடந்து வந்த பாதையை சொல்கிறது | ரேட்டிங்: 2.5/5
மலையாளத்தில் கடந்த 2021-ல் வெளியாகிய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் பேசு பொருளானது. அதை தற்போது தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். தமிழில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். போஸ்டர் நந்தகுமார், ராகுல் ரவீந்திரன், கலைராணி, யோகி பாபு.
தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்டியல்:
இசை மற்றும் பிஜிஎம் : ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட்
ஓளிப்பதிவு : பாலசுப்ரமணியம்
பாடல்கள் : கபிலன் வைரமுத்து, டாக்டர். கிருத்தியா
எடிட்டிங் : லியோ ஜான் பால்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடன வகுப்பில் எடுக்கப்பட்ட காட்சியுடன் படம் துவங்குகிறது. அவள் மகிழ்ச்சியாக இருப்பதை முகத்தில் புன்னகையில் இருந்து தெளிவாகிறது. ஒரு சமூகவியல் ஆசிரியரை அவர் மணக்க பிறகு அவளுடைய கணவனின் வீட்டில் குடும்பத்தின் மரபுகளுடன் பழகும் போது, அவளுடைய வாழ்க்கை சமையலறையில் விரிவடைகிறது. அங்கு அவள் தன் மாமியாருடன் சேர்ந்து காய்கறிகளை வெட்டுகிறாள், அரைக்கிறாள்,சமைக்கிறாள், கழுவுகிறாள், வீட்டை துடைத்து சுத்தம் செய்கிறாள். முதலில் விழிப்பதும், கடைசியாக படுக்கைக்கு வருவதும் அவள்தான், அங்கே கணவனின் ஆசையை பூர்த்தி செய்கிறாள். இதற்கிடையில், கணவர் காலை உணவு மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் முன் யோகா செய்கிறார். வீட்டின் மற்றொரு பகுதியில், அவரது மாமனார் தனது டூத் பிரஷ்ஷில் பற்பசையைப் போட்டுக் கொண்டு வருவதற்காக அவருடைய மனைவிக்காக காத்திருப்பார் வீட்டில் ஆண்கள் இருவரும் இஷ்டப்படி இருக்கின்றனர். இப்படியே தினந்தோறும் இச்சம்பவம் தொடர்கிறது. இந்நிலையில், மாமியார் தன் இளைய மகளின் பிரசவத்திற்காக செல்கிறார். அன்றிலிருந்து குடும்ப பொறுப்பு முழுவதையும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனித்து கொள்கிறார். தன் மாமியார் செய்த வேலையையும் சேர்த்து அவள் கவனிக்க வேண்டியியதாகி விடுகிறது. சில மாதங்களாக மாமியார் இல்லாதது அவளது வாழ்க்கையை மேலும் கடினமாக்குகிறது. அவர்களது குடும்பத்தின் மரபுகள் மற்றும் வழக்கமான வீட்டு வேலைகளைத் தொடர அவள் போராடுகிறாள். மனஉளைச்சலில் சிக்கி தவிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கையின் மீது சலிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், நடன ஆசிரியர் பணிக்கு செல்ல விருப்பப்படுகிறார். இதற்கு கணவர் மற்றும் மாமனார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பை மீறி வேலைக்கு செல்ல முயற்சி செய்கிறார். புகுந்த வீட்டில் அவளுடைய வாழ்க்கை ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை. அவள் திருமணம் செய்து கொண்ட வீட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வளர்ப்பு கொண்டவர், மாதவிடாய் தொடர்பான பழமையான பழக்கவழக்கங்களை இன்னும் நம்பும் குடும்பத்தில் வாழ்வது கடினம் என்பதை உணர்கிறாள். சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட அமைப்பை அவள் எப்படி சமாளிக்கிறாள் அல்லது வேறு ஏதேனும் முடிவை எடுக்கிறாளா? என்பதே மீதிக்கதை.
கணவனாக வரும் ராகுல் ரவீந்திரன் சுயநல மனிதராக நடித்துள்ளார். மாமனாராக போஸ்டர் நந்த்தகுமார், கலைராணி, திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.
யோகிபாபுவின் கேமியோ தோற்றம் எடுபட வில்லை.
ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம், எடிட்டர் லியோ ஜான் பால், பின்னணி இசையில் ஜெர்ரி சில்வஸ்டர் வின்சன்ட் ஆகியோர் கதைக்குத் தேவையான அளவு கோளை கையாண்டு, படத்தை மற்றொரு நிலைக்கு உயர்த்த உதவியது அவர்களது பங்களிப்பு.
மொத்தத்தில், ஆணாதிக்கத்தை பற்றி பேசும் தி கிரேட் இந்தியன் கிச்சன், இது இன்றைய பெண் சமுதாயம் தடங்கல்களை கடந்து வந்த பாதையை சொல்கிறது.