வேம்பு சினிமா விமர்சனம் : | ரேட்டிங்: 3/5

0
338

வேம்பு சினிமா விமர்சனம் : வேம்பு – குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆபத்திலிருந்து தங்களைக் பாதுகாத்துக்கொள்ள தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான பதிவு | ரேட்டிங்: 3/5

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:
தயாரிப்பு ; கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி
எழுத்து – இயக்கம் ; ஜெஸ்டின் பிரபு
ஒளிப்பதிவு ; ஏ.குமரன்
படத்தொகுப்பு ; கே.ஜே வெங்கட்ரமணன்
இசை ; மணிகண்டன் முரளி
பாடகர்கள் ; அந்தோணி தாசன், தஞ்சை சின்ன பொண்ணு, சுந்தர அய்யர் மற்றும் கபில் கபிலன்
மக்கள் தொடர்பு ; A.ஜான்

வேம்பு கிராமத்தில் வளர்ந்த பெண், தன் தந்தையின் எண்ணப்படி சிலம்பம் கற்று நல்ல தேர்ச்சி பெற்று சிறந்து விளங்குகிறார்.சிறு வயதிலிருந்தே தற்காப்புக் கலையை பெண்கள் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும், படிப்பறிவும் முக்கியம் என்றும் தந்தையின் அறிவுரையை கடைப்பிடித்து அந்த கிராமத்திலேயே முன் மாதிரியாக தைரியமான பெண்ணாக வளர்கிறார். அத்தை மகன் புகைப்படக்கலைஞராக இருக்கும் சக்திவேல்(ஹரி கிருஷ்ணன்) வேம்பு மீது காதல் இருந்தாலும் வேம்புவின் சம்மதத்திற்காக பொறுமையாக காத்திருக்கிறார். முதலில் படித்து முடித்து விட்டு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே வேம்புவின் ஆசை. இதனிடையே வேம்புவின் தந்தையிடம் செங்கல் சூலை முதலாளி மகளுக்கு சீக்கிரம் திருமணம் செய்து விட அறிவுறுத்தி பணமும் கொடுக்கிறார்.தந்தையின் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காத வேம்பு முதலில் தயங்கினாலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். தந்தையும் சக்திவேலுக்கும் வேம்புவிற்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறார். புதிய வாழ்க்கையை தொடங்கியிருக்கும் நேரத்தில் சக்திவேலுக்கு விபத்து ஏற்பட்டு பார்வை திறனை இழக்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் வேம்பு, மருத்துவரிடம் அழைத்துச் செல்ல சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்தால் படிப்படியாக குணப்படுத்திவிடலாம் என்கிறார். அன்றாட செலவுகளுக்கே திண்டாடும் நிலையில், புகைப்பட கலைஞராக களமிறங்கி கணவரின் ஒத்துழைப்போடு சம்பாதிக்க தொடங்குகிறார். தற்காப்பிற்காக கற்ற சிலம்பத்தை கிராமத்திற்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு கற்றும் கொடுக்கிறார். இவரின் கற்றுக் கொடுக்கும் திறனால், வேம்புவிற்கு கிடைத்த அங்கீகாரம் என்ன? சக்திவேலுக்கு பார்வை கிடைத்ததா? இவர்களின் வறுமை விலகி வசந்தம் வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஷீலா ராஜ்குமார் வேம்புவாக ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் சிலம்ப வித்தையை நேர்த்தியாக கற்று அழுத்தமான நடிப்பை தந்து திரைக்கதைக்கு உயிரூட்டி உள்ளார்.
முழுக்க முழுக்க ஒரு கிராமத்து இளைஞனாக கிராமத்துப் பழக்க வழக்கங்களையெல்லாம் கற்றுக்கொண்டு ஒரு கிராமத்து மண் சார்ந்த மனிதனாகவே ஹரி கிருஷ்ணன் சக்திவேலாக, மனதில் நிற்கிறார்.
ஷீலாவின் தந்தையாக தியேட்டர் லேப் ஜெயராவ் ஒரு இயல்பான வாழ்வியல் தந்தையாக வாழ்ந்துள்ளார்.தொழில்நுட்ப ரீதியாக, ஓளிப்பதிவாளர் ஏ.குமரன் வேம்பு படத்தை அழகிய வாழ்வியலாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் மணிகண்டன் முரளி இசை மற்றும் பின்ணனி இசை கதையோட ஒன்ற வைத்துள்ளது.கலை இயக்குநர் கோபி கருணாநிதி காட்சிகள் இயல்பாக அமையும் விதமாக சுற்றுப்புற சூழலை உருவாக்கிக் உள்ளார். படத்தொகுப்பாளர் வெங்கட்ரமணன்; ஏடிட்டிங்கில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது எப்படி தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள், ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார், மகளை பாதுகாப்பாக வளர்க்கிறார்;, அவர்களுடைய கனவுகளுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என்ற பெண்களுக்கான படமாக மட்டுமல்லாமல், இப்போதைய தலைமுறைக்கான படமாக கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் சூழலை புரிந்து மனைவி வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு எந்த அளவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், என்றும் குழந்தைகள் தங்களுக்கு என ஒரு கனவு இருந்தாலும் பெற்றோரை எப்படி மதித்து நடக்க வேண்டும் போன்ற பல சென்டிமென்ட்டான விஷயங்களுடன் சிலம்பத்தை மையமாக வைத்து தற்காப்புக் கலை பெண்கள் எந்த அளவுக்கு அவசியம் என்பதை திரைக்கதையில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் வி ஜஸ்டின் பிரபு.

மொத்தத்தில் மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் ஷ_ர்ஸ், எஸ் விஜயலட்சுமி தயாரித்திருக்கும் வேம்பு – குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆபத்திலிருந்து தங்களைக் பாதுகாத்துக்கொள்ள தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான பதிவு.