மெட்ராஸ் மேட்னி சினிமா விமர்சனம்

0
131

மெட்ராஸ் மேட்னி சினிமா விமர்சனம் : மெட்ராஸ் மேட்னி வித்தியாசமான கோணத்தில் புதிய அனுபவத்தை தரும் சிம்பிளாக குடும்ப படம் அனைவரும் சென்று பார்த்து ரசித்து மகிழலாம்

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் மணி, தேவ் ஆனந்த், ஆர்ச் தாம்சன், ராபர்ட் மார்டிசென்கோ, கோரின் மார்டிசென்கோ தயாரித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் மெட்ராஸ் மேட்னி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் மணி.

இதில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா,  மதுமிதா,  சாம்ஸ்,  கீதா கைலாசம்,  பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு -ஆனந்த் ஜி. கே, இசை – கே. சி. பாலசாரங்கன் , படத்தொகுப்பு – சதீஷ்குமார் சமுஸ்​கி,  கலை – ஜாக்கி, மக்கள் தொடர்பு-யுவராஜ்.

ஒரு முதியோர் ஒய்வு இல்லத்தில் வசிக்கும் அறிவியல் புனைகதைகளை எழுதும் எழுத்தாளர் ஜோதி ராமையாவை (சத்யராஜ்) அங்கே பராமரிப்பு வேலைகளை செய்யும் லில்லி என்ற பெண் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை எழுதும்படி நிர்பந்திக்கிறார். அதன்படி அந்த எழுத்தாளர் சுவாரஸ்யம், சாகசம் இல்லாத நடுத்தர குடும்பத் தலைவன் கண்ணன் பற்றி எழுதும் கதையாக, ஜோதி ராமையா தன்னுடைய குரலில் படத்தின் காட்சிகளை விளக்கும் விதமாக படம் ஆரம்பமாகிறது. கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் வேலையை செய்யும் கண்ணன் (காளி வெங்கட்) காதலித்து கமலம்(ஷெல்லி) திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் குப்பை அள்ளும் வேலையை விட்டு விட்டு கடன் வாங்கி ஆட்டோ ஒட்டி பிள்ளைகளை படிக்க வைக்கிறார். அவர்களுக்கு மகள் தீபிகா(ரோஷிணி ஹரிபிரியா) மகன் தினேஷ் (விஷ்வா) என்று அளவான அன்பான குடும்பம்.  படிப்பை முடித்த தீபிகா பெங்களுரில் தங்கி வேலை செய்தாலும் அமெரிக்கா சென்று வேலை செய்து கடனை அடைத்து பெற்றோரை வசதியாக வாழ வைக்க வேண்டும் என்ற லட்சித்துடன் இருக்கிறார்.  மகன் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர விண்ணப்பித்திருக்கிறார். மகள் காதலிக்கும் இளைஞனை நிராகரிக்கும் கண்ணன், பெண்ணிற்கு வரன் பார்த்து திருமணத்தை முடிக்க முயல்கிறார்.திருமண செலவிற்காக சேட்டிடம் கடன் பெற்று கார் வாங்குவதற்காக ஒட்டுனர் பயிற்சியில் சேர்ந்து கற்றுக் கொள்கிறார். இதனிடையே எதிர்பாராத விதமாக கண்ணன் வீட்டில் வளர்க்கும் நாய் மின்சாரம் தாக்கி இறந்து விடுகிறது. இதனால் கோபத்தில் இருக்கும் மகன் தினேஷ் மின்சார அலுவலகத்திற்கு சென்று சண்டை போடுகிறார். மகனை தேடி வரும் பெற்றோர்கள் அவமானப்படுத்தப்பட, அதன் பின் என்ன நடந்தது?  தந்தை அவமானப்படுவது எதனால் என்பதை பிள்ளைகள் உணர்ந்து திருந்தினார்களா? அடுத்த தலைமுறையை தலை நிமிர உழைக்கும் கண்ணனின் கஷ்டத்தை பிள்ளைகள் உணர்ந்தார்களா? தீபிகா அமெரிக்க செல்ல முடிந்ததா? அதன் பின் கண்ணன் குடும்பத்தில் என்ன மாற்றங்கள் நடந்தது? என்பதை நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை நிஜத்தை பிரதிபலிப்பதே கதையின் முடிவு.