பேரன்பும் பெருங்கோபமும் சினிமா விமர்சனம் : பேரன்பும் பெருங்கோபமும் – சாதியின் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் சாதி வெறியர்களுக்கு ஒரு பொருத்தமான சவுக்கடி | ரேட்டிங்: 3/5
நடிகர்கள்:
ஜீவாவாக விஜித் பச்சன்
சாராவாக ஷாலி நிவேகாஸ்
முத்துப்பாண்டியாக மைம் கோபி
ரத்தினவேல் வேடத்தில் அருள்தாஸ்
மாரியம்மாவாக தீபா
சரோஜாவாக கீதா கைலாசம்
தமிழ்ச் செல்வியாக சுபத்ரா ராபர்ட்
வீரசக்தியாக என்.பி.கே.எஸ்.லோகு
டிஎஸ்பி செழியனாக சாய் வினோத்
வள்ளியாக வலீனா
மஞ்சுளா தேவியாக ஹரிதா
எழுத்தாளராக பவா செல்லதுரை
டெக்னிஷியன் பட்டியல்:
இயக்குனர் – சிவபிரகாஷ்
இசை – இளையராஜா
ஒளிப்பதிவாளர் – ஜே.பி.தினேஷ்குமார்
படத்தொகுப்பாளர் – ராமர்
கலை இயக்குனர் – சரவணன்
மக்கள் தொடர்பு – ஜான்சன்
தயாரிப்பாளர் – காமாட்சி ஜெயகிருஷ்ணன்
தயாரிப்பு நிறுவனம்- E5 எண்டர்டெயின்மென்ட்
ரயிலில் இருந்து தொங்கும் துண்டிக்கப்பட்ட காலுடன் ஒரு கொடூரமான உடல் பாகங்கள் சிதறிக்கிடப்பதோடு, ஒரு த்ரில்லர் அதிர்வுடன் படம் தொடங்குகிறது. பின்னர் ஆண் செவிலியரான ஜீவா (விஜித் பச்சன்) தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சீனியர் நர்ஸ் பணியில் பலருக்கும் பிடித்தமானவராக இருந்து வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் முத்துப்பாண்டியின் (மைம் கோபி) சொந்த தொகுதியில் அமைந்திருக்கும் அந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை ஒன்று காணாமல் போகிறது. ஜீவாவை சந்தேகிக்கும் போலீஸ், அவரை குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்து விசாரிக்கும் போது, குற்றத்தை ஒப்புக்கொள்வதோடு, போலீசாரிடம் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்கிறார். காவல்துறை அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள். போலீசார் ஜீவாவை பற்றி விசாரிக்கும் போது, கிராமத்து கொடுமைக்காரர்களிலிருந்து அரசியல் பிரமுகர்கள் ஜாதி வெறி பிடித்த முத்துப்பாண்டி (மைம் கோபி), ரத்தினவேல் (அருள்தாஸ்), வீரசக்தி (என்.பி.கே.எஸ்.லோகு) ஆகிய மூவரை குறிவைத்து பழிவாங்க திட்டமிட்டே செய்யாத குற்றத்தை செய்ததாக கூறி ஜீவா சிறைக்கு சென்றது தெரியவருகிறது. ஜாதி வெறி, கௌரவக் கொலைகள், தடைசெய்யப்பட்ட காதல், ஜீவா ஒரு கலப்பு ஜோடிக்கு உதவ, பஞ்சாயத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராமமும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து காதலனை உயிரோடு எரித்து, காதலியின் காதுகளில் விஷத்தை ஊற்றி மனநிலை பாதிப்படைய செய்வது, பின் வேறு மதத்தை சேர்ந்த சாரா (ஷாலி நிவேகாஸ்) ஜீவா காதல், அதை தொடர்ந்து அவரது சாதி வெறி கொண்ட தாய் தமிழ்ச்செல்வி (சுபத்ரா ராபர்ட்) கர்ப்பிணி சாராவை கொள்ள உதவுவது என தொடர்ச்சியான ஃப்ளாஷ்பேக் கள் மூலம் ஜீவாவின் அமைதியான வாழ்க்கை ஒரு உணர்ச்சி மிகுந்த திருப்பத்தை எடுக்கும் சக்தி வாய்ந்த கதையை பல திருப்பங்களுடன் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ சொல்கிறது. இறுதியில் ஜீவாவின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
தனது முதல் படத்திலேயே ஒரு அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்து சிறந்த உடல் மொழியுடன், குறிப்பாக வயதான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஷாலி நிவேகாஸ் நாயகியாக அழகாக ஃப்ளாஷ்பேக் பகுதிகளை பூர்த்தி செய்கிறார்.
வில்லன்களாக மைம் கோபி மற்றும் அருள்தாஸ் தங்கள் பாத்திரங்களை போதுமான அளவு நிறைவேற்றுகிறார்கள்.
சுபத்ரா ராபர்ட், தீபா, கீதா கைலாசம், என்.பி.கே.எஸ்.லோகு, செழியன், வலீனா, ஹரிதா, பவா செல்லதுரை உட்பட ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக இளையராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ்குமாரின் காட்சி கோணங்கள், படத்தொகுப்பாளர் ராமரின் எடிட்டிங், சரவணனின் கலை ஆகியோரின் பங்களிப்புகள் சாதி அடிப்படையிலான உணர்ச்சிகள் நிறைந்த பயணமாக மாற்றுகின்றன.
ஒரு ஆணவ படுகொலையை மையப்படுத்தி சமூகத்தில் சாதி வெறியர்களால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் நடைபெறும் சாதி வன்முறை சம்பவங்களின் தொகுப்பாக சுவாரசியமான திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் சிவபிரகாஷ்.
மொத்தத்தில் E5 எண்டர்டெயின்மென்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்திருக்கும் பேரன்பும் பெருங்கோபமும் – சாதியின் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் சாதி வெறியர்களுக்கு ஒரு பொருத்தமான சவுக்கடி.