Chennai City News

கட்ஸ் சினிமா விமர்சனம்

கட்ஸ் சினிமா விமர்சனம் : கட்ஸ் தலைப்பை போல படத்தைப் பார்க்க பார்வையாளர்களுக்கு கட்ஸ் வேண்டும் | ரேட்டிங்: 2/5

நடிகர்கள் :
ரங்கராஜ் – ரங்கராஜ் மற்றும் பெத்தனசாமி
ஸ்ருதி நாராயணன் – கணவதியம்மாள்
நான்சி – அனு
டெல்லி கணேஷ் – கரீம் பாய்​
சாய் தீனா – பாண்டியன்
பிர்லா போஸ் – தாமஸ்
ஸ்ரீலேகா – பெத்தனசாமி அம்மா
அறந்தாங்கி நிஷா – மகாலட்சுமி
பிரவீன் மஞ்ச்ரேக்கர் – வில்லன்
மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு : மனோஜ்
இசை : ஜோஸ் பிராங்க்ளின்
தயாரிப்பு நிறுவனம் : ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : ஜெயபாரதி ரங்கராஜ்
எடிட்டர்: ரஞ்சித்
ஸ்டண்ட்: ‘செயல்” பிரகாஷ்
எழுதி இயக்கியவர்: ரங்கராஜ்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.பெத்தனசாமி (ரங்கராஜ்) தனது கர்ப்பிணி மனைவியை (ஸ்ருதி நாராயணன்) நள்ளிரவில் ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார், அங்கு அவள் பிரசவ வலியால் துடிக்கிறார், அப்போது கொலைவெறி கொண்ட மர்ம மனிதர்களால் தாக்கப்படுகிறார். அவர் தனது மனைவியை கொலையாளிகள் இடமிருந்து காத்து அருகிலுள்ள ஒரு மருத்துவச்சியிடம் அழைத்துச் செல்கிறார். அங்கு, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க உயிருக்குப் போராடிய தந்தை, தனக்கு ஒரு மகன் பிறந்து இருப்பதை அறிந்ததும் இறந்துவிடுகிறார். விதவை மனைவி மீன் விற்று தனது குழந்தையை வளர்க்கும் போது மக்களிடமிருந்து பணம் பறிக்கும் போலீஸை துணிச்சலுடன் எதிர்க்கிறார், போலீஸ் அவளை அடித்து அவமானப்படுத்துகிறார், மேலும் அவள் போலீஸ்காரரைக் கொலை செய்யும் போது, அவரும் கொல்லப்படுகிறார். இளம் வயதிலேயே தனது தாயையும் தந்தையையும் இழந்த ஹீரோ ரங்கராஜ் (ரங்கராஜ்), தனது தாயின் விருப்பப்படி நேர்மையான காவல் ஆய்வாளராகி, தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார், ஆனால் அவரது நேர்மைக்கு தொடர்ந்து சோதனைகள் ஏற்படுகிறது. அவரது காதல் மனைவி அனு (நான்சி), ஒரு அன்பு மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவரது மனைவி திடீரென்று கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மனைவி இறந்த சோகத்தில் குடித்து பித்து பிடித்தவன் போல் இருக்கும் போது தனது மனைவியை கொன்றது யார்? என்ற உண்மை தெரிய வருகிறது. தன் அன்பு மனைவியை கொன்றவனை உடனடியாக கொன்றுவிடுகிறான். அதன் பிறகு ரங்கராஜின் வாழ்க்கை என்ன ஆனது? அவரது மனைவி ஏன் கொலை செய்யப்பட்டாள்? தந்தை பெத்தனசாமியின் கதை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

அப்பா விவசாயி பெத்தனசாமி மற்றும் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் என முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் ரங்கராஜ், முழு படத்தையும் சுமந்துள்ளார். காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் தந்தை மகன் கதாபாத்திரத்திற்கு வெவ்வேறு பரிணாமங்களில் நேர்த்தியான நடிப்பு வழங்கியுள்ளார்.

பெத்தனசாமி மனைவியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன், முக்கிய கதாபாத்திரத்தில் பிரசவ வலியால் துடிக்கும் காட்சியிலும், ரவுடி போலீஸை எதிர்க்கும் காட்சியிலும், ஒரு அற்புதமான நடிப்பு வழங்கியுள்ளார்.

காவல் ஆய்வாளர் ரங்கராஜ் கதாபாத்திரத்திற்கு காதல் மனைவி நான்ஸியாக அழகிய புன்னகையுடன் ஒரு குறைபாடற்ற நடிப்பை வழங்கியுள்ளார்.

பிரவீன் மஞ்ச்ரேக்கர் வில்லனாக தனது பாத்திரத்தை மேம்படுத்தி இருக்கலாம்.

மறைந்த குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா உட்பட மற்றும் பலர் தங்கள் இருப்பை பதிவு செய்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் மனோஜ் சற்று பலவீனமான கதையை நல்ல காட்சி கோணங்களுடன் உயர்த்த முயற்சித்துள்ளார். எடிட்டர் ரஞ்சித்தின் படத்தொகுப்பில் துடிப்பும் சுவாரஸ்யமும் இல்லை. இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் இசை மற்றும் பின்னணி இசை பரவாயில்லை.

இயக்குநர் ரங்கராஜ் ஒரே நேரத்தில் இரண்டு கதைகளைச் சொல்ல முயற்சித்துள்ளார், ஒன்று விவசாயத்தின் சிறப்பையும் மற்றும் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றியும், மற்றொன்று சமூகப் பார்வை கொண்ட மூன்றாம் பாலின் நலன்கள் பற்றியது. இரண்டு கதைகளும் திரைக்கதையில் இணைக்கப்படும் போது சுவாரஸ்யமான மற்றும் அற்புதமான திருப்பங்கள் இருக்க வேண்டும். ஆனால் கட்ஸ் கதைகளத்தில் இரண்டுமே குறைவு. இயக்குனர் ஏதேனும் ஒரு கதை களத்தை தேர்ந்தெடுத்து அதில் பயணித்திருந்தால் நிச்சயம் பார்வையாளர்களை கவர்ந்திருக்கும்.

மொத்தத்தில் ஓ.பி.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கும் கட்ஸ் தலைப்பை போல படத்தைப் பார்க்க பார்வையாளர்களுக்கு கட்ஸ் வேண்டும்.

Exit mobile version