‘ஆட்சிகள் மாறினாலும் கொடுமைகள் மாறவில்லை’ – பா.ரஞ்சித் ஓப்பன் டாக்!
வேங்கை வயல் சம்பவத்தில் தமிழக அரசு விரிவான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
பிரபல இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’. யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப்படத்தில் சிறுமி ஸ்ரீமதி, ஹரிக்கிருஷ்ணன் அன்புதுரை, ஜி.எம் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள நிலையில் அறிமுக இயக்குநர் ஷான் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
நிகழ்ச்சி நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த பா.ரஞ்சித், புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலினத்தவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவுகளை கலந்த விவாகரம் பற்றி பேசினார்.
சமூகநீதியில் அக்கறை கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்க கூடிய திமுக அரசு இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்; திமுக ஆட்சியில் திருவண்ணாமலை கீழூர், வேங்கை வயல் உள்ளிட்ட பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.