மயிலாடுதுறையில் ‘டக்கர்’ திரைப்பட இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க, நடனமாடி வரவேற்பு!
திரையுலகில் மயிலாடுதுறைக்கு பெருமை சேர்த்து வரும் “டக்கர்”திரைப்பட இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு பொதுமக்களும், ரசிகர்களும் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க, நடனமாடி வரவேற்பளித்துக் கொண்டாட்டம். குடும்பதினருடன் டக்கர் திரைப்படத்தை கண்டு களித்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள்.
வெற்றி படமாக மாற்றி வரும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லி இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் பேட்டி.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டக்கர் திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் பொதுமக்களும், ரசிகர்களும் இணைந்து மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, மயிலாடுதுறை விஜயா திரையரங்க வளாகத்தில் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திரையுலகில் சாதனை படைத்து வரும் இயக்குனரை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். தொடர்ந்து திரையரங்கில் ரசிகர்களுடன் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் டக்கர் திரைப்படத்தை கண்டு களித்தார்.
இந்த படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ரசிகர்களோடும் பொதுமக்களோடும் திரைப்படத்தை கண்டு களித்தது தனக்கு மிகப்பெரிய நிறைவை தருவதாக இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் தெரிவித்தார்.