இதுவரை 74 புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்..! – பிரபு
.ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்ததுள்ளார். பாடல்களை வைரமுத்து, மோகன் ராஜன் எழுதியுள்ளனர். மே மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.விழாவில் படக்குழுவினருடன் திரையுலகப் பிரமுகர்கள் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் -விநியோகஸ்தர் கே .ராஜன், இயக்குநர் எஸ். . சந்திரசேகரன், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர்கள் வசந்த், பாண்டியராஜன், பேரரசு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, , நடிகர் ஆரி, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல்,தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.மே மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பரணி ஸ்டுடியோவில் நடந்தது.
பிரபு பேசும்போது, “இதுவரை நான் 74 புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி இருக்கேன். இந்தப் படமும் அதில் ஒன்று. இந்தப் படத்தில் நிறைய இளைஞர்களுடன் பணியாற்றினேன். எல்லோரும் அற்புதமான நடிகர்கள்; நல்ல டெக்னீசியன்கள்.. இந்தப் படத்தில் அண்ணன் தி ராஜேந்தர் பாடிய எனர்ஜியான பாடல் ஒன்றுக்கு நான் ஆடி இருக்கிறேன். ஆரம்பத்தில் நான் ஆட விரும்பவில்லை. ஆனால் வற்புறுத்தி ஆட வைத்து விட்டார்கள். படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது . அங்குள்ள மக்கள் அப்பா மீதும் என் மீதும் என் மகன் மீதும் அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் . படம் முப்பதாம் தேதி வருகிறது. அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்..!” என்றார்
விழாவில் பேசிய மன்சூர் அலிகான் , ”அடுத்து தமிழ்நாட்டை ஒரு நடிகன்தான் ஆளப் போகிறான். மக்கள் கையில் காசு இல்லை. அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், ‘ஓட்டுப் போடுற எல்லாருக்கும் ரெண்டு லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட்ல போடணும். அதை வைத்து மக்கள் ஏதேனும் தொழில் செய்யலாம் . அதுக்கு வரி இல்லை என்று அறிவிக்கணும்…
இப்படத்தில் கதாநாயகியும் வெகு பொருத்தமாக அமைந்து இருப்பது மனதிற்கு திருப்தி அளிக்கிறது. படம் அனைத்து தரப்பினரரையும் கூறினார் விதமாக உருவாகியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..! ” என்று கூறினார்.