எண்பதுகளில் தமிழ் திரை உலகத்தை கலக்கிய கதாநாயகிகளை ஒன்றினைத்த ‘மல்லி’ தொடர்!
எண்பதுகளில் தமிழ் திரை உலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி என்ற தொலைக்காட்சி தொடரில் இணைந்து கலக்குகின்றனர்.
நாயகன் நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும் நளினியும் கலக்க அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும் டென்ஷனையும் கூட்டுகிறார் அம்பிகா..
மூன்று முன்னால் கதாநாயகிகளின் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது மல்லி மெகாத்தொடர். திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் திருமதி.B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.
படைப்பாக்கத்தை நீடா.கே.சண்முகம் கவனிக்க, படைப்பக்கத் தலைமைப் பணியை ப்ரின்ஸ் இம்மானுவேல் கவனிக்கிறார். ஸ்டாலின் இயக்குகிறார்.