போதை பொருளுக்கு எதிரான ‘கவுண்ட்டவுன்’
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் 350 மேற்பட்ட விருதுகளை வென்று சாதனை படைத்த ‘யக்ஷி’ உட்பட சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல குறும்படங்களை தயாரித்தவர் பிரிஜேஷ் பிரதாப்.
மகிழ்ச்சியாக வாழும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் போதைப் பொருளுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்ள முயல்வதும் அதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது பற்றி போலீசார் நடத்தும் விசாரணையுமே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.
ஒருவன் எப்பொழுது போதைப் பொருளை பயன்படுத்தத் தொடங்குகிறானோ அவனது வாழ்க்கையின் கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விடுகிறது., போதை மருந்து மாஃபியாவுக்கு கவுண்ட்டவுன் சொல்லி கொண்டு , அவர்களை பின் தொடர்ந்து போலீஸ் படை எப்போதும் இருப்பதாகவும் எச்சரிக்கிறது இந்த படம்.