தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்-10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் MP.விஸ்வநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உறுப்பினர்கள் லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பூ, கோவை சரளா, லலிதகுமாரி, தேவயானி, சோனியா வெங்கட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சமீபத்தில் மறைந்த 64 கலைஞர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கோவை சரளா 2022-2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.
2023-2024 ஆம் ஆண்டுக்கான வழக்கறிஞர் மற்றும் கணக்குத் தணிக்கையாளர் அறிமுகம் செய்து ஒப்புதல் பெறப்பட்டது. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள் நடைபெற்றது.
கடந்த கால நிர்வாக செயல்பாடுகள், புதிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு வங்கி கடன், நட்சத்திரங்களிடம் நிதி திரட்டுதல், நடத்திர கலைவிழா நடத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி பொதுச்செயலாளர் விஷால் ஒப்புதல் பெற்றார்.
அதைத் தொடர்ந்து துணை தலைவர் பூச்சி S.முருகன் நன்றியுரை வழங்க நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பொதுக்குழு கூடம் இனிதே நிறைவடைந்தது.
நிகழ்ச்சியை ஶ்ரீமன் தொகுத்து வழங்கினார்.
முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.