Chennai City News

திரைக்கலைஞர்கள் அதிகாரத்தின் பக்கம் துணை நிற்பதென்பது மக்களுக்கு செய்யும் துரோகம் – இயக்குநர் அமீர் பரபரப்பான பேச்சு

திரைக்கலைஞர்கள் அதிகாரத்தின் பக்கம் துணை நிற்பதென்பது மக்களுக்கு செய்யும் துரோகம் – இயக்குநர் அமீர் பரபரப்பான பேச்சு

சென்னையில் நடைபெற்ற `அக்கா குருவி’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், “இளையராஜா பாஜகவில் கூட இணையலாம். ஆனால் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசுவது தவறு. ஆனால் அதற்காக இளையராஜாவை சாதிய ரீதியாக விமர்சனம் செய்வது அதை விட தவறானது. அதை நாம் அனுமதிக்கக் கூடாது” என்று பேசியுள்ளார்.

மேலும் “பாஜகவின் தேர்தல் பார்முலாவே தேர்தலின்போது திரைப்பிரபலங்களை சந்தித்து அவர்களை வைத்து பிராசரம் செய்து வெற்றிபெறுவதுதான். திரைப்பிரபலங்கள் மூலம் பாஜகவையும், மோடியையும் விளம்பரம் செய்வதுதான் அவர்களின் யுக்தி. கடந்த 2014, 2019 ஆண்டு தேர்தல்களின்போது விவசாயிகளையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல் இந்தி நடிகர், நடிகைகளை மட்டும் சந்தித்து அவர்கள் மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வெற்றி பெற்றனர். அதையே தற்போது தமிழ்நாட்டிலும் முயற்சி செய்கின்றனர்.

இதில் இளையராஜாவை போல நம்முடைய திரைக்கலைஞர்கள் சிக்கி கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கு அடையாளம் கொடுத்த மக்களின் பக்கம் நிற்பது தான் திரைக்கலைஞர்களுக்கான சமூக பொறுப்பு. அதிகாரத்தின் பக்கம் துணை நிற்பதென்பது மக்களுக்கு செய்யும் துரோகம். இதை உணர்ந்து திரைக்கலைஞர்கள் செயல்பட வேண்டும்” என்றும் இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.

Exit mobile version