Chennai City News

சவால் விட்ட மீரா மிதுன்…. அதிரடியாக கைது செய்த போலீசார்

சவால் விட்ட மீரா மிதுன்…. அதிரடியாக கைது செய்த போலீசார்

நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

ஆனால், என்னை கைது செய்யவே முடியாது. அது கனவில் தான் நடக்கும் என்று மீரா மிதுன் சவால் விட்டு இருந்தார். இந்நிலையில், மீராமிதுன் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் மீராமிதுனை கைது செய்துள்ளனர். போலீசார் விரைவில் மீராமிதுனை சென்னைக்கு அழைத்து வர இருக்கிறார்கள்.

Exit mobile version