கலைஞர் 100: ‘முதலமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக அனைவருக்கும் நன்றி!’
இந்த நிகழ்ச்சியில் நான் உரையாற்ற வரவில்லை நன்றி கூற வந்துள்ளேன். முதலமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கலைஞர் 100’ விழாவில் பேசினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறை சார்பில் கலைஞர் 100 விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக (டிச. 06) நடைபெற்றது. இதில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 22000 சீட்டுகள் அமைக்கப்பட்டு 1000த்திற்க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
“நடிகர் சங்கம் சார்பில் இந்த இனிய நிகழ்ச்சியை பெருமைபடுத்த கூடிய வகையில் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நான் உரையாற்ற வரவில்லை நன்றி கூற வந்துள்ளேன். அப்பா, அம்மா வைத்த பெயரை கூட கூப்பிட்டாமல் கலைஞர் என்று தொண்டர்களால் அழைக்கப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவர் மறைந்த போது தமிழ்நாடே கலங்கி நின்றது. எல்லா தரப்பு மக்களும் அவர் மறைந்த போது அஞ்சலி செலுத்தினர்.
இவ்வாறு பேசினார்.