Site icon Chennai City News

அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருவதை,வறுமை சூழ்நிலை கருதி, வாங்கி கொள்ளலாம் அதே நேரத்தில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் – நடிகர் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி சொன்னது நடக்கப் போகிறது!

இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்திருக்கும் விஜய் ஆண்டனி, திரையுலக வியாபாரத்திலும் முக்கிய நபராக வலம் வருகிறார். தற்போதைய சினிமாவில் கதை தான் கதாநாயகன், என்று மேடைகளில் பலர் பேசினாலும், ரசிகர்களின் பேவரைட் ஹீரோக்களின் படங்கள் தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. அப்படிப்பட்ட ஹீரோக்களின் பட்டியலில் ஒருவராக வலம் வரும் விஜய் ஆண்டனியின் படங்கள் அனைத்தும் வியாபார ரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால், ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையரங்க உரிமையாளர்களிடமும் விஜய் ஆண்டனி படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிப்பில் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாக உள்ள ‘ரோமியோ’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது..

இதில் ரோமியோ படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மற்றும் நாயகி மிருணாளினி ரவி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்..

அப்போது பேசிய விஜய் ஆண்டனி குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்ட அவர் குறிப்பாக மனைவிகள் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்த அவர் ஒவ்வொரு கணவனும் மனைவியை இந்த படத்திற்கு அழைத்து வர வேண்டும்.

ரோமியோ திரைப்படம் காதல் மற்றும் திருமணத்திற்குப் பிறகு கணவன் – மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் படம் பேசியிருக்கிறது.

படத்தின் நாயகி முதலிரவு காட்சியில் மதி அருந்துவது போன்ற வெளியிட்ட போஸ்டர் குறித்த கேள்விக்கு:

பதில் அளித்த விஜய் ஆண்டனி படத்தில் சிறிய காட்சியாக அதை வெளிப்படுத்தி உள்ளதாகவும்,இதில் கலாச்சார சீரழிவு போன்ற விஷயங்கள் புகுத்தபடவில்லை
பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள் என குறிப்பட்ட அவர்,ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவது ஒரு தாய்,மனைவி போன்றவர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள்
சூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்திற்கு பிறகு மனதளவில் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது,அண்மையில் வெளியான சில படங்கள் இதற்கு எடுத்துகாட்டாக இருக்கிறது.

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சி கேள்விக்கு:

தாம் அனைத்து கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்..

தற்போது அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்குவது குறித்த கேள்விக்கு:

ஓட்டுக்கு பணம் வழங்குவது, பெறுவது தவறாக இருந்தாலும்,வறுமை,சூழ்நிலை கருதி ஓட்டுக்கு வழங்கப்படும் பணத்தை வாங்கி கொள்ளலாம், ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்குதான் ஓட்டு என்பதை முடிவு செய்யாமல், நல்லவர்களுக்கு வாக்களிக்கலா என தெரிவித்தார்.

இபப்டத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Exit mobile version