பரமசிவன் பாத்திமா சினிமா விமர்சனம்: பரமசிவன் பாத்திமா நிச்சயம் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தும் | ரேட்டிங்: 2/5
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் பரமசிவன் பாத்திமா படத்தை எழுதி, இயக்கி தயாரித்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன்
இதில் விமல், சாயாதேவி,எம்.எஸ்.பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், சுகமார், கூல்சுரேஷ், அருள்தாஸ்,ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: தீபன் சக்ரவர்த்தி, ஒளிப்பதிவு : எம்.சுகுமார், கலை இயக்குனர்: வீராசமர், எடிட்டர்: புவன், தயாரிப்பு நிர்வாகி: டி.முருகேசன், நடன இயக்குனர்: லீலாவதி, ஸ்டண்ட்: தினேஷ் காசி, ஒலி வடிவமைப்பாளர்: ஹரிஷ்.கே.அன்பு, ஒப்பனை: ஜி.சுரேஷ்குமார், உடை: ரஞ்சித், ஸ்டில்கள்: கே.ராஜ், பிஆர்ஒ: நிகில் முருகன்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சுப்பிரமணியபுரம் மற்றும் அதிலிருந்து பிரிந்த நகரங்கள், அதாவது யோகோபுரம் (பெரும்பாலும் கிறிஸ்தவர்) மற்றும் சுல்தான்பேட்டை (பெரும்பாலும் முஸ்லிம்) மதத்தால் பிரிந்து வாழ்கின்றனர். பரவலான மதமாற்றங்களே பிரிவிற்குக் காரணம் என்ற கதையுடன் படம் தொடங்குகிறது, மேலும் இந்த இரண்டு நகரங்களிலிருந்தும் வருங்கால மணமகன்கள் அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு இரவில் அடர்ந்த காட்டுக்குள் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கும் சம்பவங்கள் நடக்கிறது. இதனை விசாரிக்க தனிப்படையுடன் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் காட்டிற்குள் முகாமிட்டு தங்குகிறார். கிராமத்தில் இரு மதங்களின் மக்களையும் விசாரிக்கும் போது எந்த வித தடயங்களும் கிடைக்காமல் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. இந்த கொலைகளை செய்யும் பரமசிவன் (விமல்) மற்றும் பாத்திமா தமிழ்செல்வி (சாயாதேவி) ஆகியோரின் காட்சிகள் நமக்கு கிடைக்கின்றன. இந்த கொலைகளால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் அடிக்கடி நடக்கிறது. ஒரு கட்டத்தில் ஃப்ளாஷ்பேக்கில், மத மாற்றத்தால் பிரிக்கப்பட்ட குழந்தைப் பருவ காதலர்களான பரமசிவன் (விமல்) மற்றும் பாத்திமா (சாயா தேவி), மாம் மாறிய பாத்திமாவின் தந்தையின் மரணம், இந்துவாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவரது மரண ஆசை, அதன் விளைவாக ஏற்படும் புதைகுழி தகராறுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. பரமசிவன் மற்றும் பாத்திமா இருவரும் கொலை செய்யப்படுகிறார்கள், மேலும் அவர்களின் குறைகள் பழிவாங்கும் ஆவிகளாக வெளிப்படுகின்றன. இறுதியில் இந்த கிராமத்தில் மதத்தால் ஏன் பிரிவினை நடந்தது? விமல் மற்றும் சாயாதேவி யாரை ஏன் இந்த கொலைகளை செய்கிறார்கள்? இ என்பதே படத்தின் மீதிக்கதை.பரமசிவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல், பாத்திமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாயா தேவி மற்றும் பாத்திமாவின் தோழியான ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேஷ்விதா நோத்தியான நடிப்பை தந்துள்ளனர்.
கிறிஸ்தவ தேவாலய பாதரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தனது மனதில் தான் ஒரு நடிகர் திலகம் என்று நினைப்பில் பார்வையாளர்கள் எரிச்சல் அடையும் விதமாக நடித்துள்ளார்.
காவல்துறை அதிகாரியாக இசக்கி கார்வண்ணன், வில்லனாக ஒளிப்பதிவாளர் சுகுமார், கூல்சுரேஷ், அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை அனைவரும் இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
இசை: தீபன் சக்ரவர்த்தி, ஒளிப்பதிவு : எம்.சுகுமார், கலை இயக்குநர்: வீராசமர், எடிட்டர்: புவன், நடன இயக்குனர்: லீலாவதி, ஸ்டண்ட்: தினேஷ் காசி, ஒலி வடிவமைப்பாளர்: ஹரிஷ்.கே.அன்பு, ஒப்பனை: ஜி.சுரேஷ்குமார், உடை: ரஞ்சித், ஸ்டில்கள்: கே.ராஜ், ஆகியோர் தொழில்நுட்ப ரீதியாக அவர்கள் உழைப்பு வீணடிக்க பட்டுள்ளது.
மத அரசியல், மதமாற்ற அரசியல், மதமாற்றத்தால் எப்படி குடும்பத்தை பிரிக்கிறது, சொந்தங்கள் இடையே எப்படி பிரிவினையை ஏற்படுத்துகிறது, இதனால் ஏற்படும் கொலைகள் என கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லீம் மதத்தை வைத்து குழப்பமான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.
மொத்தத்தில் லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கும் பரமசிவன் பாத்திமா நிச்சயம் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தும்.