ராயன் சினிமா விமர்சனம் : ராயன் குடும்ப உணர்வு கலந்த ஆக்ஷன் எமோஷனல் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

0
1709

ராயன் சினிமா விமர்சனம் : ராயன் குடும்ப உணர்வு கலந்த ஆக்ஷன் எமோஷனல் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

நடிகர்கள்:
தனுஷ்
எஸ். ஜே. சூர்யா
பிரகாஷ்ராஜ்
செல்வராகவன்
சந்தீப் கிஷன்
காளிதாஸ் ஜெயராம்
துஷாரா விஜயன்
அபர்ணா பாலமுரளி
வரலட்சுமி சரத்குமார்
சரவணன்
திலீபன்

படக்குழு :
எழுத்தாளர்-இயக்குனர் : தனுஷ்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : கலாநிதி மாறன்
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ்
படத்தொகுப்பு : பிரசன்னா
நடன இயக்குனர் : பிரபு தேவா, பாபா பாஸ்கர்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஜாக்கி
பாடலாசிரியர் : கவிஞர் தனுஷ், கானா கதர், அறிவு
ஆடை வடிவமைப்பாளர் :  காவ்யா ஸ்ரீராம்
சண்டைப் பயிற்சி : பீட்டர் ஹெய்ன்
ஒப்பனை : பி. ராஜா
படங்கள் : தேனி முருகன்
விளம்பரம் : சிவம் சி. கபிலன்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : ரமேஷ் குச்சிரையார்
நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் சீனிவாசன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது

கிராமத்தில் சிறு வயதில் காத்தவ ராயன் (தனுஷ்) இரண்டு தம்பிகள் முத்துவேல் ராயன் (சுந்தீப் கிஷன்), மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) மற்றும் மற்றும் புதிதாகப் பிறந்த தங்கை துர்கா (துஷாரா விஜயன்) ஆகியோர் இருக்க, ராயனிடம் பெற்றோர் சந்தைக்கு போயிட்டு மாலைக்குள் வீடு திரும்புவோம் என சொல்லிவிட்டு செல்கின்றனர். ஆனால் அவர்கள் சொன்ன படி வீடு திரும்பாததால் ஊர் சாமியாரிடம் காணாமல் போன தங்கள் பெற்றோரை பற்றி கூறி அவர் வீட்டில் இரவு தங்குகினறனர்.  அந்த சாமியார் தனது தங்கையை விற்று பணம் பார்க்க முயலும் போது சாமியாரை கொன்று விட்டு,  தாய், தந்தையை தொலைத்த ராயன்  தம்பி, தங்கையுடன் சரக்கு லாரி வண்டியில் ஏறி சென்னைக்கு வந்து விடுகிறார்.  அவர்கள் அதிர்ஷ்டவசமாக, சென்னையில் காய்கறி சந்தையில் ராயன் ஒரு கருணையுள்ள நபர் சேகரின் (செல்வ ராகவன்) உதவியைப் பெறுகிறார், அவர் ராயனுக்கு வேலை மற்றும் தங்குமிடத்தை வழங்குகிறார். ராயன் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையை வளர்த்து வருகிறார். மூத்த தம்பி முத்துவேல் ராயன் குடிகாரன், முரடன், உதவாக்கரை அவனுக்கு ஒரு காதலி அபர்ணா பாலமுரளி. 2வது தம்பி மாணிக்கம் ராயன் கல்லூரியில் தேர்தலில் நிற்க பிரச்சனைகள் வருகிறது. 3வது தங்கை துர்காவுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்படுகிறார். சேது (எஸ்.ஜே. சூர்யா) மற்றும் துரை (சரவணன்) ஆகிய இரண்டு மாஃபியா டான்கள் இப்பகுதியை ஆளுகின்றனர். இருவரும் எந்த மோதலும் இல்லாமல் சமரசத்தில் இருந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், அப்பகுதியில் அமைதியாக அனைவருடைய வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு போலீஸ் அதிகாரி (பிரகாஷ் ராஜ்) இந்த மாஃபியா டான்களை பழிவாங்க நினைக்கிறார், சேதுவுக்கும் துரைக்கும் இடையே சைலன்ட்டாக சண்டையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அவரின் ஏற்பாட்டின் படி மோதல் நடக்கிறது. ராயன் தனது சகோதரி துர்காவின் திருமணத்திற்கு தயாராகி வரும் போது, அதில் எதிர்பாராதவிதமாக ராயனின் சகோதரர் முத்து இந்த மோதலில் மாட்டிக் கொள்கிறார். இந்த மோதலில் முத்து துரையின் மகனை கொன்று விடுகிறார், மேலும் விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறுகின்றன. துரை கோபத்தில் ராயனிடம் முத்துவை தனது வீட்டுக்கு அனுப்ப சொல்கிறார். ஆனால், ராயன் தன் தம்பிகளுடன் துரை வீட்டுக்கு சென்று அவரை கொலை செய்கிறார். துரையை கொலை செய்தது யார் என்று ஒரு பக்கம் போலீசும், மறுபக்கம் சேதுவும் அவனது ஆட்களும் தேடுகிறார்கள். அதன் பின் கதை துரோகம் கலந்த பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரயனின் ரத்தம் தெரிக்கும் ஆட்டமே படத்தின் மீதிக்கதை!

ஓட்டி வெட்டிய தலைமுடியுடன் காத்தவராயன் கதாபாத்திரத்தில் தனுஷ் படத்தின் பெரும் பகுதியில் தன் தம்பிகள், தங்கை மீதான பாசத்தை வெளிப்படுத்திய விதம், குடும்பத்திற்காக எதிராளிகளிடம் தன் கோபத்தையும், உணர்ச்சியையும் கட்டுப்படுத்திக் கொண்டு குறைவான வசனங்களுடன் நடிப்புத் திறனை தனது கண்கள் மூலம் அசத்தலாக வெளிப்படுத்தி உள்ளார். மேலும் தனது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் போது வெறித்தனமான கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி உள்ளார்.

சிக்கலான கதாபாத்திரத்தில் தனுஷின் தம்பியாக சந்தீப் கிஷன் தனது கதாபத்திரத்தை திறம்பட கையாண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் படத்தின் இரண்டாம் பகுதியின் விறுவிறுப்புக்கு இவரது கதாபாத்திரம் பெரும் பங்கு வகித்துள்ளது.

அதே போல தனுஷின் மற்றொரு தம்பியாக காளிதாஸ் ஜெயராம் பாகம் குறைவு என்றாலும், நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

தங்கை துர்காவாக துஷாரா விஜயன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தன் பெற்றோரை போல பாவித்து தன் மீதும், தன் தம்பிகள் மீதும் அன்பும், பாசத்தையும் வைத்த அண்ணனுக்கு ஆபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடும் போது அவரை காப்பாற்றும் காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியதுடன், எதிரிகளிடம் இருந்து அண்ணனை காப்பாற்ற சண்டை போடும் காட்சிகளிலும், அண்ணனை கொல்ல முயன்ற தனது மற்றொரு சகோதரனைப் கொல்லும் காட்சிகளிலும் உயிரோட்டமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

பிரகாஷ் ராஜ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் ஆர்ப்பாட்டம் இல்லாத அடக்கமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

செல்வராகவன் படத்துக்கு பெரிய பலம் சேர்த்துள்ளார்.

சரவணன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் அந்தந்த பாத்திரங்களில் கண்ணியமாக நடித்துள்ளனர்.

ரஹ்மானின் அற்புதமான இசை மற்றும் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் சீரான கேமரா வேலை, பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகள் மற்றும் படத்தொகுப்பாளர் பிரசன்னாவின் துல்லியமான  எடிட்டிங் ஆகியவற்றின் உதவியுடன், படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை பார்வையாளர்களை திறம்பட ஈர்க்கிறது.

தனுஷ், ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, ஒரு இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராக, தனுஷ் தனது திறமைகளை வெற்றிகரமாக வெளிப்படுத்துகிறார். தனது முதல் இயக்குனரான பா.பாண்டியைப் போலவே, கேமராவுக்கு பின்னாலும் தன்னால் திடமான வேலைகளைச் செய்ய முடியும் என்பதை தனுஷ் மீண்டும் காட்டுகிறார். எளிமையான கதையாக ஆரம்பித்து கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்ட கதைகளம் அமைத்துள்ளார் இயக்குனர். ஒரு சகோதரர், ஒரு தாழ்மையான வாழ்க்கையை நடத்துவது, கடினமாக உழைப்பது மற்றும் தனது குடும்பத்தை தீங்கு விளைவிப்பவர் களிடமிருந்து பாதுகாக்க போராடுவது ஆகியவற்றின் மையக் கதையில் எதிரிகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்து, துரோகத்தின் பின்னணியில் ஒரு வலுவான திரைக்கதை அமைத்து பல கணிக்க முடியாத திருப்பங்களுடன் மிகவும் ஈர்க்கக்கூடிய இரண்டாம் பாதியுடன் விறுவிறுப்பாக ரத்தம் தெறிக்க விட்டு நேர்த்தியாக இயக்கியுள்ளார் தனுஷ்.

மொத்தத்தில் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள ராயன் குடும்ப உணர்வு கலந்த ஆக்ஷன் எமோஷனல் த்ரில்லர்.