ஏ.ஆர். ரஹ்மானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

0
159

ஏ.ஆர். ரஹ்மானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஏ. ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு ஊதியமாக வாங்கிய 3 கோடியே 47 லட்சம் ரூபாயை அவர் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்குச் செலுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது உயர்நீதி மன்றம் அவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.