நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்

0
122

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என சூர்யா கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் கருத்து நீதிமன்ற மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல் தவறாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

எனவே, சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொண்டு நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்தும்படி நீதிபதி சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.