சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்பு: பெண்கள் முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் – ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு
சென்னை,
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்,
‘சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், உச்ச நீதிமன்றம் “பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு” என்று வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.
இத்தீர்ப்பால், சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு இது மேலும் வலுசேர்ப்பதாக அமையும்’ என்று பதிவிட்டுள்ளார்.
சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், உச்ச நீதிமன்றம் "பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு" என்று வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.
இத்தீர்ப்பால், சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு இது மேலும் வலுசேர்ப்பதாக அமையும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 11, 2020