”ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு என்ன ஒரு வரலாற்று சாதனை!” – பிரதமர் மோடி பெருமிதம்!!
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், இதுவரை இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை நமது அபாரமான விளையாட்டு வீரர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததில் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஹாங்சோவ்,
45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் 107 பதக்கங்களை இந்தியா வென்றுள்ள நிலையில், வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு என்ன ஒரு வரலாற்று சாதனை!
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், இதுவரை இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை நமது அபாரமான விளையாட்டு வீரர்கள் பெற்றுக் கொடுத்ததில் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது.
நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதியும், இடைவிடாத மனமும், கடின உழைப்பும் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது. அவர்களின் வெற்றிகள் எங்களுக்கு நினைவுகூருவதற்கான தருணங்களைக் கொடுத்தன, நம் அனைவருக்கும் ஊக்கமளித்தன மற்றும் சிறந்து விளங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
https://twitter.com/narendramodi/status/1710487198544593024
What a historic achievement for India at the Asian Games!
The entire nation is overjoyed that our incredible athletes have brought home the highest ever total of 107 medals, the best ever performance in the last 60 years.
The unwavering determination, relentless spirit and hard… pic.twitter.com/t8eHsRvojl
— Narendra Modi (@narendramodi) October 8, 2023