3 நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை தொடங்கி வைத்தார் மோடி

0
136

3 நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை தொடங்கி வைத்தார் மோடி

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தொற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பரிசோதனைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா ஆகிய 3 இடங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.

இந்த மையங்களை காணொலி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், முதல்-மந்திரிகள் உத்தவ்தாக்கரே (மகாராஷ்டிரா), மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), யோகி ஆதித்யநாத் (உத்தர பிரதேசம்) ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த அதிவிரைவு பரிசோதனை மையங்களில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும்.

பரிசோதனை மையங்களை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி ‘‘இந்தியாவில் சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டதால் பாதிப்பு குறைவாக உள்ளது. உயிரிழந்தோர் சதவீதம் இந்தியாவில்தான் மிகவும் குறைவாக உள்ளது. கொரோனா சிகிச்சைக்காக 11 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது’’ என்றார்.