தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்

0
31

தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பியாக இருந்தவர். இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். போலவே ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராக 2009 முதல் 2010-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் ரோசய்யா காலமாகியுள்ளார். கடந்த 1933-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 88 -வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.