ஜாஸ்பர் திரைவிமர்சனம் : ஜாஸ்பர் – க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
208

ஜாஸ்பர் திரைவிமர்சனம் : ஜாஸ்பர் – க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

அறிமுக இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் விவேக் ராஜகோபால், ஐஸ்வர்யா தத்தா, லாவண்யா, சி.எம்.பாலா, ராஜ் காலேஷ், பிரசாந்த் முரளி, கோட்டயம் ரமேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ஜாஸ்பர். இப்படத்தை விஸ்வரூபி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிக்க, குமரன் சிவமணி (டிரம்ஸ் சிவமணி மகன்) இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மணிகண்டராஜா. படத்தொகுப்பு அபிலாஷ் பாலச்சந்திரன். மக்கள் தொடர்பு டைமண்ட் பாபு.

கதை:
மிஸ்டர்.ஜெ ஒரு வயதானவர், திமிர் பிடித்தவர் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல், கிரிமினல்களை கொல்லும் கதாநாயகனாக வலம் வருபவர் ஜாஸ்பர். தன் வாழ்வில் சந்தித்த பெரும் இழப்பினால் அவை அனைத்தையும் விட்டு எப்போதும் குடித்துக்கொண்டே தனியாக வாழ்ந்து வருகிறார்;. அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜாஸ்பர் மீண்டும் தன் வாழ்வில் ஒரு இழப்பை சந்திக்க நேர்கிறது. அந்த இழப்பை தவிர்ப்பதற்கு மறுபடியும் ஹிட்மேன் ஆக  உருவெடுக்கிறார் ஜாஸ்பர். அனாதை இல்லத்தில் வளரும் ஹரிஷ் (விவேக் ராஜகோபால்) தன் தோழி லாவன்யாவை மணந்து பிள்ளையுடன் வங்கி மேனேஜராக ஜாஸ்பர் வாழும் ஊருக்கு வருகிறான். ஜாஸ்பர் வீட்டில் வாடகைக்கு தங்குகிறார்கள். பேங்க் மேனேஜரான அவரிடம், வின்சென்ட்டின் குழுவினர் 100 கோடி ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி கொடுக்க சொல்கிறார்கள். சட்ட விரோத  செயலில் ஈடுபட மாட்டேன் என்று சொல்லி ஹரிஷ் மறுக்கிறான். இந்நிலையில் இந்த கும்பல் கூட்டம் ஒன்று ஹரிஷை கடத்தி சென்று துன்புறுத்துகிறார்கள். கடத்தப்பட்ட ஹரிஷின் மனைவி தனது கணவனை காப்பாற்ற ஜாஸ்பரை அணுகுகிறார். துன்புறுத்தியும் சம்மதிக்காத காரணத்தால் ஹரிஷின் கை விரல்களை வெட்டி லாவண்யாவுக்கு அனுப்புகிறது கடத்தல் கும்பல். முதலில் சம்மதிக்காத ஜாஸ்பர் இதையறிந்து கோபம் அடைந்து தனி ஆளாக ஹரிஷை கடத்தியவர்களை தேடி செல்கிறான். திமிர் பிடித்த கொஞ்சம் கூட இரக்கம் இல்லா மிஸ்டர் ஜெ என்னும் ஜாஸ்பர் கடந்த கால வாழ்க்கை என்ன? எதற்காக கடத்தல் காரர்களிடமிருந்து ஹரிஷை காப்பாற்ற முன் வந்தார் ஜாஸ்பர்? யார் அந்த வின்சென்ட்? ஜாஸ்பருக்கும் ஹரிஷ்க்கும் என்ன தொடர்பு? என்பதே மீதிக்கதை.

முரட்டுத்தனமான இளவயது ஜாஸ்பர், மற்றும் வங்கி அதிகாரியாக இரட்டை வேடங்களில் விவேக் ராஜகோபால் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக வங்கி அதிகாரியாக கடத்தப்பட்டு  துன்புறுத்தப்படும் காட்சிகள் நம் கண்களை குளமாக்குகிறார்.

வயதான  மிஸ்டர் ஜெ  தோற்றத்தில் சி.எம்.பாலா ஹிட்மேனாக அளவான நடிப்பை வழங்கி ஜாஸ்பர் கதாபாத்திரம் உயிர்பித்திருக்கிறார்.

மனைவி லாவன்யாவாக ஐஸ்வர்யா தத்தா, போலீசாக நடித்திருக்கும் பிரசாந்த் முரளி, வில்லனாக வின்சென்ட் என்கிற பாஸ்டர் எட்வர்ட் கதாபாத்திரத்தில் ராஜ் காலேஷ் ஆகியோர் நல்ல தேர்வு. அவர்களின் பங்களிப்பு திரைக்கதையை சுவாரசிய படுத்துகிறது.

பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி அருமையான அறிமுகம். வாழ்த்துக்கள் குமரன் சிவமணி.

மணிகண்ட ராஜாவின் ஒளிப்பதிவும், அபிலாஷ் பாலச்சந்திரனின் படத்தொகுப்பும் பரபரப்பான திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்ஷன் நிறைந்த திரில்லராக படைத்துள்ளார் அறிமுக இயக்குனர் யுவராஜ்.டி.

மொத்தத்தில் விஸ்வரூபி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரித்திருக்கும் ஜாஸ்பர் – க்ரைம் த்ரில்லர்.