பறந்து போ சினிமா விமர்சனம் : பறந்து போ – ஜாலியாக திரையரங்கிற்கு குடும்பத்துடன் பறந்து வந்து சிரித்து மகிழ்ந்தபடி படம் பார்த்து, பெற்றோர்கள் புதிய புத்துணர்ச்சியுடன் திரும்பலாம் | ரேட்டிங்: 4.5/5
நடிகர்கள்: சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர்;.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: ராம்,
ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம்,
படத்தொகுப்பு: மதி வி.எஸ்.,
இசை: சந்தோஷ் தயாநிதி,
பின்னணி இசை: யுவன் சங்கர் ராஜா,
பாடல் வரிகள்: மதன் கார்க்கி,
தயாரிப்பு வடிவமைப்பு: குமார் கங்கப்பன்,
சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா,
காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவனே,
நடன இயக்குநர்: ரிச்சி ரிச்சர்ட்சன்,
ஒலி வடிவமைப்பு: அருள் முருகன்,
ஆடியோகிராஃபர் : எம் ஆர் ராஜகிருஷ்ணன்,
கலரிஸ்ட்: ராஜசேகரன்,
விஎஃப்எக்ஸ் : கார்த்திக் கம்பேட்டன்,
ஸ்டில்ஸ் : ஜெய்குமார் வைரவன்,
ஒப்பனை : சசிகுமார் பரமசிவம், சுதி சுரேந்திரன்,
விளம்பர வடிவமைப்பு: ட்வென்டி.ஒன்.ஜி,
தயாரிப்பு: ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ்,
தயாரிப்பாளர்கள் : ராம், வி குணசேகரன், வி கருப்புசாமி, வி ஷங்கர்,
உலகளாவிய வெளியீடு: ரோமியோ பிக்சர்ஸ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்
தந்தை-மகன் உறவை மையமாகக் கொண்ட இந்தப் படம், பல நகரவாசிகள் தங்கள் வேகமான வாழ்க்கையில் மறந்து போகும் மதிப்புகளை ஆராய்கிறது. சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கோகுல் (மிர்ச்சி சிவா) மற்றும் குளோரி (கிரேஸ் ஆண்டனி) என்ற இரு மதங்களைச் சேர்ந்த தம்பதிகள் தங்கள் எட்டு வயது குறும்பு மற்றும் பிடிவாதக்கார மகன் அன்புவுடன் (மிதுல்) வாழும் ஒரு நடுத்தர குடும்பத்தினர். கோகுல் ஒரு கடை வைக்க போராடும் ஒரு மனிதர், அதே நேரத்தில் குளோரி தங்கள் வாழ்க்கையைத் தக்கவைக்க ஒரு சேலை கடை வைத்திருக்கிறார். மகன் அன்புக்கு வளமான கல்வி உட்பட தங்கள் மகனுக்கு சிறந்ததை கொடுக்க விரும்பும் கனவுடன் விலையுயர்ந்த கோடை வகுப்புகள், விலையுயர்ந்த பள்ளி மற்றும் விலை உயர்ந்த காலணி உட்பட அனைத்துக்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும், அதனால் இவர்கள் இருவரும் எண்ணற்ற இஎம்ஐ களால் பிணைக்கப்பட்டு, மகனை வீட்டில் தனிமையில் விட்டு விட்டு, கதவுக்கு வெளியே உள்ள கிரில் கேட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்வார்கள். அவ்வப்போது கைபேசியில் தொடர்பு கொண்டு அவனுக்கு தேவையானவை கிடைக்க ஏற்பாடு செய்தாலும், அவனை சரியாக கவனிக்காமல் ஒரு பரபரப்பான வாழ்க்கை நடத்துகிறார்கள். பூட்டிய வீட்டுக்குள் தனிமையில் மடிக்கணினியில் கோடை வகுப்புகள் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டும், ஆனால் அவனது கவனம் வேறு பக்கம் இருக்கும். ஆன்லைன் வகுப்புகள் சலிப்பை ஏற்படுத்துவதாகக் கூறுகிறான். வெளியே சென்று நண்பர்களுடன் சேர்ந்து விளையாடியும், பெற்றோருடன் கைகோர்த்து சந்தோஷமாக குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஏங்குகிறான். நகர வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து தப்பிக்க, நிதி ரீதியாக சிரமப்படும் தந்தை கோகுலும் எட்டு வயது குறும்புக்கார மகன் அன்புவும் திட்டமிடப்படாத சாலைப் பயணத்தை, பரந்த மலை சார்ந்த திறந்தவெளி களைக் கொண்ட சிறிய இடங்களுக்கு “பறக்க” செல்கின்றனர். வழியில், ஒவ்வொரு இடத்திலும் அன்புவுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கிறது தான் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் அதே குறும்பு தனத்துடன் பயணிக்கிறான். மேலும் வழியில், அன்பான மற்றும் கருணை உள்ளம் கொண்ட அந்நியர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகள் மூலம், வீட்டில் அமைதியாக அவநம்பிக்கையான வாழ்க்கையில் பெற்றோர்கள் உண்மையில் என்ன இழக்கிறார்கள் என்பதை கோகுல் உணர்கிறார். மெதுவாக, கோகுலும் சுதந்திரமாக இருக்க கற்றுக் கொள்கிறார். கோயம்புத்தூரில், குளோரி பணத்தின் மீதான தனது பற்றுதலை விடுவித்துக் கொள்ளும்போது, அன்புவைப் போலவே, அவள் இந்த தருணத்தில் தனக்கென ஒரு சுதந்திர தருணத்தைப் பெறுகிறார். இந்தப் சாலை பயணத்தில் அன்பு தன் குழந்தைப் பருவ சுதந்திரத்தை அனுபவிக்கும் மகிழ்ச்சியும், கோகுல் மற்றும் குளோரி தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் மாற்றங்களே ராமின் ‘பறந்து போ’.
பாசம், பாதுகாப்பு, பயம், பொய்கள், அக்கறை, தவறுகள் மற்றும் சோர்வு நிறைந்த நடுத்தர வயது தந்தையாக சிவா, கோகுலின் கதாபாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தியுள்ளார், மேலும் தனது கட்டமைக்கப்பட்ட முதிர்ந்த நடிப்பால், கதைக்கு ஏற்ற எதிர்க்கருத்து களுடன் பார்வையாளர்களின் ஒவ்வொரு மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அத்தகைய கதாபாத்திரத்தில் சிவாவின் திறமையை அழகாக சித்தரித்து, அதை அவரது திரைப் பயணத்தில் சிறந்த படமாக மாற்றியதற்காக இயக்குனர் ராமுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
மிதுல் ரியான் அன்புவாக துறுதுறுப்பு, குழந்தைக்கு உண்டான கோபம், சந்தோஷம், மகிழ்ச்சி என 8 வயது சிறுவன் மனநிலையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
கிரேஸ் ஆண்டனி காதல், தாய் பாசம், கருணை, இரக்கம், தொழில், பொருளாதார அழுத்தம், பதற்றம், தொழில் ரீதியாக குடும்பத்தில் இருந்து தற்காலிக பிரிவு, என குளோரி கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார். கைபேசியில் மகனிடம் பேசும் போது மகனுடன் இல்லாத தவிப்பு, தன்னை ஒதுக்கி வைத்த தன் குடும்பத்தை நினைத்து ஏங்கும் காட்சிகள் மனதை கவர்ந்தது, கிளைமாக்ஸ் காட்சியில் அவரது துறுதுறு லூட்டி திரையரங்கமே சிரிப்பலையில் மூழ்கடிக்க செய்கிறது.
சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான் மூவரும் காட்சிக்கு காட்சி உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மீது ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
கோகுலின் தந்தையாக பாலாஜி சக்திவேல், அஞ்சலி, அஜு வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் ஆகியோர் குறைந்த திரை நேரத்திலும் அவர்கள் இருப்பு கவனிக்க வைத்து மறக்க முடியாத தருணங்கள் வழங்குகிறார்கள், காட்சிகளில் அவர்களுடனான சந்திப்பு உயிரோட்டமாக உணர வைத்து தந்தை மகன் பயணத்தின் ஒவ்வொரு இடத்தையும் வளப்படுத்துகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரத்தின் அழகான பிரேம்கள் இயற்கை ஒளி மற்றும் மண் சார்ந்த தொனிகளுடன் பயணத்தை சுவாரஸ்யம் ஆக்குகின்றன.
மதி வி.எஸ். விறுவிறுப்பான படத்தொகுப்பும், யுவன் சங்கர் ராஜாவின் மென்மையான பின்னணி இசையும், மதன் கார்க்கி பாடல் வரிகளுக்கு சந்தோஷ் தயாநிதியின் இசையும் படத்தை வேற லெவலுக்கு உயர்த்தி பறக்க விட்டிருக்கிறது.
தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான கதைசொல்லல் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள இயக்குனர் ராம், பரபரப்பான நகர்ப்புற வாழ்க்கையின் மத்தியில் தந்தை-மகன் இணக்கத்தை, மூன்று பேர் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பம் நவீன பொருளாதாரச் சூழலில் வாழ்க்கையை எவ்வாறு சந்தோஷமாக கொண்டாட முடியும், அதை இன்னும் எப்படி மகிழ்ச்சியாக மாற்ற முடியும் என்பதை மகன் மூலம் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் வில்லனே இல்லாத திரைக்கதையில் எளிமையான சூழ்நிலையுடன் கற்பித்து, பெற்றோர்கள் குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிடும் போது குடும்பங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அத்தனை அழகு என்பதை பீல் குட் படமாக பறக்க விட்டிருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ், இணைந்து தயாரித்திருக்கும் பறந்து போ – ஜாலியாக திரையரங்கிற்கு குடும்பத்துடன் பறந்து வந்து சிரித்து மகிழ்ந்தபடி படம் பார்த்து, பெற்றோர்கள் புதிய புத்துணர்ச்சியுடன் திரும்பலாம்.