பயாஸ்கோப் சினிமா விமர்சனம் : பயாஸ்கோப் – வெகுஜன மக்களை கவர்ந்திழுக்கும் | ரேட்டிங்: 3/5

0
359

பயாஸ்கோப் சினிமா விமர்சனம் : பயாஸ்கோப் – வெகுஜன மக்களை கவர்ந்திழுக்கும் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் : சங்ககிரி ராஜ்குமார், வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ் எம் மாணிக்கம் ,இந்திராணி, எஸ் எம் செந்தில் குமார், சிவரத்தினம் , பெரியசாமி, மோகனப்பிரியா, தங்கராசு, தர்மசெல்வன், நமச்சிவாயம், ராஜேஷ் கிருஷ்ணன், ரஞ்சித், நிலா நடித்துள்ளனர் .

தொழில்நுட்ப கலைஞர்கள் :
படத்தொகுப்பு மற்றும் இயக்கம் : சங்ககிரி ராஜ்குமார்.
இசை :  தாஜ்நூர்.
தயாரிப்பாளர்கள் : சந்திராசூரியன், பிரபு மற்றும் பெரிய சாமி.
ஒளிப்பதிவு : முரளி கணேஷ்
பத்திரிக்கை தொடர்பு : நிகில் முருகன்

இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் படித்த பட்டதாரியும் கதையின் நாயகனுமான ராஜ்குமார் தனது பாசமிகு சித்தப்பாவின் ஆசீர்வாதத்துடன் கிராமத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்து சினிமாவை கற்றுக் கொள்கிறார். பிறகு படம் இயக்குவதற்கான வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர்கள் அலுவலகம் ஏறி இறங்கிக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரின் தாயார் தனது கணவனின் தம்பியின் ஜாதகத்தை எடுத்து ஊரில் சொல்வாக்கு மிக்க சாமியாரிடம் ஜாதகம் பார்க்கிறார். அதற்கு அந்த சாமியார் இந்த ஜாதகக்காரருக்கு நேரம் சரியில்லை அதனால் இனி பிச்சை எடுப்பார் என்று கூறுகிறார். மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட சித்தப்பா தற்கொலை செய்து கொள்கிறார். இதை அறிந்து கிராமத்திற்கு வந்து கதறி அழுகிறார் ராஜ்குமார். மூட நம்பிக்கையாலும் அறியாமையாலும் இப்படி தனது சித்தப்பா தற்கொலை கொண்டார் என்று எண்ணி வருந்துகிறார். அந்த சாமியார் ஒரு போலி சாமியார் என்றும் இனி இது போல் போலி சாமியார்களால் எந்த ஒரு உயிரும் போகக்கூடாது என்று எண்ணிய கதாநாயகன். தன் சித்தப்பாவின் கதையை ஒரு படமாக எடுத்து வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார். சினிமா பற்றி எதுவும் தெரியாத தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைக் கொண்டு படத்தை எடுக்க தொடங்கி, அதற்காக தனது வீட்டில் இருந்த ஆடு, மாடு என அனைத்தையும் விற்று படம் எடுக்கிறார்.இதனை அறிந்த சாமியார் தனது செல்வாக்கை பயன்படுத்தி அவருக்கு பல இன்னல்களை தருகிறார். ஒரு கட்டத்தில் கொலை முயற்சியும் நடக்கிறது. முடித்த படத்தை வெளியிட இன்னும் பல லட்சம் தேவைப்படுவதால், கடைசியில் குடும்பத்தின் வாழ்வாதார நிலத்தையும் விற்று படத்தை வெளியிட முயற்சிக்கும் தருவாயில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ்.எம்.மாணிக்கம், இந்திராணி, எஸ்.எம்.செந்தில் குமார், சிவரத்தினம், பெரியசாமி, மோகனப்பிரியா, தங்கராசு, தர்ம செல்வன், நமச்சிவாயம், ராஜேஷ் கிருஷ்ணன், ரஞ்சித், நிலா உட்பட அனைவரும் நடிக்க வில்லை இயல்பாக அவர்களுக்குள் உள்ள நகைச்சுவை கலந்த நடிப்புத்திறன் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது என்பது தான் நிஜம். அவர்களின் வெகுளித்தனமான பேச்சும், செயலும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவையை சரவெடியாக அமைந்துள்ளது.

சிறப்பு தோற்றத்தில் வரும் சத்யராஜ் மற்றும் சேரன் கூடுதல் வலு சேர்த்துள்ளனர்.

முரளி கணேஷ் ஒளிப்பதிவு, சங்ககிரி ராஜ்குமார் எடிட்டிங், தாஜ்நூர் இசை ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் பணியை பக்காவாக செய்து கிராமத்தின் உண்மையான வசீகரத்தின் தருணங்களை திரையில் உணர வைத்துள்ளனர்.

ஒரு கிராமம் திறமை மற்றும் மேம்பட்ட உபகரணங்களுடன் திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தால் என்ன நடக்கும்? என்பதை ரசிகர்களை ஈர்க்கக்கூடிய நகைச்சுவையுடன், சினிமா துறையில் ஒரு படம் வெளி வர திரைத்துறையினர் கள் சந்திக்கும் துன்பங்களை, துயரங்களை, வலிகளை கச்சிதமாக திரைக்கதையில் சொல்லி, நட்புனா என்னனு தெரியாத உண்மையான கிராமத்து பெரியவர்களை வைத்து சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்.

மொத்தத்தில் சந்திராசூரியன், பிரபு மற்றும் பெரியசாமி இணைந்து தயாரித்துள்ள பயாஸ்கோப் – வெகுஜன மக்களை கவர்ந்திழுக்கும்.