ஆகஸ்ட் 16,1947 விமர்சனம் : ரேட்டிங்: 3.5/5

0
34

ஆகஸ்ட் 16,1947 விமர்சனம் : ரேட்டிங்: 3.5/5

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் என்.எஸ்.பொன்குமார்;.

இதில் கௌதம் கார்த்தி, ரேவதி சர்மா, புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேஷன் ஷா, மதுசூதன ராவ், போஸ் வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு – செல்வகுமார், கலை-சந்தானம், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்.

தென் தமிழ்நாட்டின் செங்காடு பெரும் மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட கிராமம் பருத்தி விளைச்சலால் புகழ் பெற்றது. ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்ய ஜெனரல் டயருக்கு அறிவுரை வழங்கிய அதிகாரிகளில் ஒருவர்,பிரிட்டிஷ் ஜெனரல் ராபர்ட் கிளைவ் (ரிச்சர்ட் ஆஷ்டன்). இந்த குற்ற தண்டனையாக செங்காடு மலைக்கிராமத்திற்கு அனுப்பப்படுகிறார். அங்கே மலைவாழ் மக்களை அடிமைகளைப்போல் நடத்தி 16 மணி நேரம் வேலை வாங்கி பருத்தி உற்பத்தி செய்து லாபம் கொழிக்க வழி செய்கிறார். ராபர்ட் கிராமவாசிகளை உடல்ரீதியாக சித்திரவதை செய்யும் போது, அவருடைய மகன் ஜஸ்டின் அங்கு இளம் பெண்களை கற்பழித்து பாலியல் வன்கொடுமை செய்கிறார். அதனால் கிராம மக்கள் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு மண்ணில் புதைப்பது அல்லது ஆண் பிள்ளை போல் மாறுவேடத்தில் வளர்கின்றனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும்போது முழு கிராமத்தின் கட்டுப்பாட்டைப் பெற வேண்டும் என்று கனவு காணும் ஜமீன்தார் (மதுசூதனராவ்) மக்கள்; படும் அவலங்களை கண்டு கொள்ளாமல் சந்தேகத்திற்கு இடமின்றி ராபர்ட் மற்றும் ஜஸ்டின் விருப்பங்களுக்கு அடிபணிகிறார். செங்காட்டு கிராமத்தில் அனாதையான பரமன் (கௌதம் கார்த்திக்) ஒரு குட்டி திருடன். பல வருடங்களுக்கு முன்பு தன் தாயை இன்னொரு வன்கொடுமைக்கார பிரிட்டிஷ் அதிகாரியிடம் காட்டிக்கொடுத்ததால், பரமன் செங்காட்டு கிராமத்தினருடன் எப்போதும் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறார். அவர் நம்பும் ஒரே நபர் அவரது நண்பர் (புகழ்). இதற்கிடையில், ஜமீன்தார் (மதுசூதன் ராவ்) மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகளை தேன்மொழி (ரேவதி ஷர்மா) ஜஸ்டினுக்கு பயந்து மறைத்து வைத்து விட்டு இறந்து விட்டதாக கூறி நாடகமாடுகின்றனர். இந்த ரகசியம்; பரமனுக்கு மட்டும் தான் தெரியும். சிறுவயதிலிருந்தே ஜமீன் மகள் மேல் அன்பு செலுத்தும் பரமன் அவளுக்காக இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்கிறான். ஒரு கட்டத்தில் ஜஸ்டினுக்கு ஜமீன் மகள் தேன்மொழி உயிரோடு இருப்பது தெரிய வர அவளை அடைய ஜமீனை மிரட்டுகிறான். தேன்மொழியை உயிரோடு புதைத்து பலி கொடுக்க நினைக்கும் ஜமீனிடமிருந்து தேன்மொழியை பரமன் காப்பாற்றினானா? ஜஸ்டினை பரமன் என்ன செய்தான்? சுதந்திரம் அடைந்ததை செங்காடு மக்கள் அறிந்தார்களா? இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த பின்னரும் செங்காட்டு பஞ்சில் ஆங்கிலெயர்கள் தீட்டும் திட்டம் என்ன?.. சுதந்திரம் கிடைத்ததை மக்களிடம் இருந்து ராபர்ட் மறைத்ததிற்கான காரணம் என்ன? புரமன் தேன்மொழி காதல் கை கூடியதா? ஜமீன்தார் என்ன ஆனார்? என்பதே  ஆகஸ்ட் 16 1947 படத்தின் மீதி கதை.