ஷாருக்கான் – அட்லீ கூட்டணியிலிருந்து வெளியேறும் நயன்தாரா?

0
32

ஷாருக்கான் – அட்லீ கூட்டணியிலிருந்து வெளியேறும் நயன்தாரா?

ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் முடங்கி உள்ளது.

மகனுக்கு ஜாமீன் கிடைக்காததால் ஷாருக்கான் மன உளைச்சலில் இருப்பதாகவும், இதனால் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், இப்படத்தில் இருந்து நடிகை நயன்தாரா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.