பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை… திரைத்துறையினர் அதிர்ச்சி

0
111

பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை… திரைத்துறையினர் அதிர்ச்சி

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் கபிலன். தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியரான இவர், பல்வேறு படங்களுக்கு பாடல்களை எழுதி உள்ளார். இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு தூரிகை (வயது 28) என்ற மகள் இருந்தார். இவர், எம்.பி.ஏ. படித்து முடித்து விட்டு 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

Being Women என்ற பெண்களுக்கான ஆங்கில இதழின் நிறுவன ஆசிரியராக தூரிகை பணியாற்றி வந்தார். இதன் முதல் பதிப்பை கடந்த 2020 செப்டம்பர் மாதம் இயக்குனர் பா.ரஞ்சித், சேரன், நடிகை விமலா ராமன் ஆகியோர் வெளியிட்டிருந்தனர்.

எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை கபிலன். இதேபோன்று முன்னணி நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற தூரிகை திடீரென தூக்குப்போட்டு கொண்டார். மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த உஷா அலறினார். உடனடியாக தூரிகையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தூரிகை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், தற்கொலை செய்த தூரிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். தூரிகையை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.