பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட அல்லு அர்ஜுன்

0
96

பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட அல்லு அர்ஜுன்

பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா. முதலில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட புஷ்பா திரைப்படமானது இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

இப்படத்தில் பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அல்லு அர்ஜுன் செம்மரக்கட்டைகள் கடத்தும் லாரி ஓட்டுநராக நடிக்கிறார். இப்படம் இன்று திரைக்கு வர இருக்கிறது. இதற்கான பத்திரிகையார் சந்திப்பு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தனர். காலை 11.30 மணிக்கு நடைபெற இருந்த நிகழ்ச்சியானது படக்குழுவினரின் தாமதம் காரணமாக 2 மணிநேரம் தாமதமாக தொடங்கியது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அல்லு அர்ஜூனிடம் பத்திரிகையாளர் ஒருவர் தாமதமாக வந்தது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அல்லு அர்ஜுன் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்டார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அல்லு அர்ஜூன், “முதலில், நான் மிகவும் வருந்துகிறேன். நாங்கள் ஒரு தனிவிமானத்தில் வந்தோம். கடும் பனிமூட்டம் காரணமாக, விமானம் சரியான நேரத்தில் புறப்படவில்லை. நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது கூட எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்தார்.