தண்ணி வண்டி படப்பிரச்சனை: தம்பி ராமையா மற்றும் மகன் மீது போலீசில் புகார்

0
136

தண்ணி வண்டி படப்பிரச்சனை: தம்பி ராமையா மற்றும் மகன் மீது போலீசில் புகார்

தமிழில் கும்கி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் தம்பி ராமையா. அதன்பின்னர் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார். இவரது மகன் நடிகர் உமாபதி ராமையா. உமாபதி ராமையா நடிப்பில் சமீபத்தில் வெளியான தண்ணி வண்டி என்ற திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தம்பி ராமையா, அவரது மகன் உமாபதி மீது தண்ணி வண்டி படத்தின் தயாரிப்பாளர் சரவணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்தன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சரவணன், கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு படம் தயாரிக்க உத்தேசித்து இருந்தபோது தம்பி ராமையா தன்னை அணுகி தன்னுடைய மகனான உமாபதியை நடிகராக நடிக்க வைக்க கேட்டுக்கொண்டார். அப்படி செய்தால் அனைத்து பொறுப்புகளையும் தானே ஏற்று அதை நல்ல முறையில் விளம்பரம் செய்து சிறந்த முறையில் படத்தை வெற்றி பெற வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.

அதன்படி திரைப்பட நடிகர் உமாபதி ராமையாவை வைத்து தண்ணி வண்டி என்ற திரைப்படத்தை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் செய்தேன். அதன்படி 2020ஆம் வருடம் ஜனவரி மாதம் படத்தை நல்லபடியாக முடித்து விட்டு ரிலீஸ் செய்வதற்கு மேற்படி ஹீரோவாக நடித்த உமாபதி ராமையா என்பவரை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை.

வேண்டுமென்றே தன்னை கஷ்டப்படுத்தும் நோக்கத்துடன் தம்பி ராமையா மற்றும் அவரது மகன் ஆகியோர் இணைந்து கூட்டு சதி செய்தனர். படத்தின் விளம்பரத்திற்காக தம்பி ராமையாவும், அவரது மகன் உமாபதி ராமையாவும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு நஷ்ட ஈடாக தம்பி ராமையா 4 கோடி ரூபாய் தரவேண்டும், இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்து உள்ளார். மேலும் தம்பி ராமையா அவரது மகனை தவறான பாதையில் கொண்டு செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.