அடேங்கப்பா… ஒரு படத்துக்கு இவ்வளவு கோடியா கேட்கிறார் நயன்தாரா?அதிர்ச்சியில் தென்னிந்திய நடிகைகள்!

0
116

அடேங்கப்பா… ஒரு படத்துக்கு இவ்வளவு கோடியா கேட்கிறார் நயன்தாரா?அதிர்ச்சியில் தென்னிந்திய நடிகைகள்!

சமீப காலமாகவே கதாநாயகிகளின் சம்பளம் மளமளவென உயர்ந்து வருகிறது. அதற்கு காரணம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து, அந்த படங்கள் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலையும் குவிக்கின்றன. இதையெல்லாம் வைத்தே கதாநாயகிகள் தங்களது சம்பளத்தை கூட்டி வருகின்றனர்.

பொதுவாக பாலிவுட் திரையுலகில், முன்னணி கதாநாயகிகள் ஒரு படத்தில் நடிக்க ரூபாய் 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் தென்னிந்திய நடிகைகள் சம்பளம் அந்த அளவுக்கு உயராமல் இருந்தது. அதில் நயன்தாரா மட்டுமே ஒரு படத்துக்கு ரூ.5 கோடி, ரூ.6 கோடி என்று கேட்டதாக கூறப்பட்டது. மற்ற நடிகைகளின் சம்பளம் ரூ.3 கோடிக்கும் கீழே தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகை நயந்தாரா தன்னுடைய சம்பளத்தை ரூபாய் 10 கோடியாக உயர்த்தி இருப்பதாக சோஷியல் மீடியா பக்கங்களில் தகவல் பரவி வருகிறது. அதாவது சமீபத்தில் புதிய படமொன்றில் நடிக்க வைப்பதற்காக நயந்தாராவை தயாரிப்பாளர் ஒருவர் அணுகியபோது அவரிடம் ரூபாய்10 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை தமிழ், தெலுங்கு பட உலகில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாரா இப்போது இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார். பாலிவுட்டுக்கு போனதாலேயே என்னவோ தெரியல சம்பள தொகையை உயர்த்திவிட்டார் என தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் பட உலகில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.