அக்‌ஷய் குமார் உடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா உறுதி!

0
3

அக்‌ஷய் குமார் உடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா உறுதி!

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சமடையத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் இராண்டாவது அலை அதிகமாக பரவிவரும் நிலையில், நேற்று மட்டும் 57,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இதற்கிடையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அக்‌ஷய் குமார் நேற்று முதல் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் அக்‌ஷய் குமார் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, அக்‌ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், எனக்கு பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி, பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் வேலை செய்கின்றன. நான் நலமுடன் உள்ளேன். ஆனால், மருத்துவ ஆலோசனைபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் கவனமாக இருங்கள்’ என கூறி உள்ளார்.

இந்த நிலையில் அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அபிஷேக் ஷர்மா இயக்கிவந்த ’ராம்சேது’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், படக்குழுவைச் சார்ந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது ராம்சேது படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.