அனுமன் ஜெயந்தி விழா: 32 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

0
271

அனுமன் ஜெயந்தி விழா: 32 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

அனுமன்ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் பெரிய குப்பம் தேவி மீனாட்சி நகர் பகுதியில் உள்ள 32 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காலை 7 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து மூல மந்திர யாகம் நடைபெற்றது.

பின்னர் 32 அடி உயர முள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 100 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

மேலும் 32 அடி உயரம் கொண்ட வடமாலை சாற்றப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பஞ்சமுக ஆஞ்ச நேயருக்கு 67 ஆயிரம் வடை மாலைகள் சாற்றி சிறப்பு அபிஷேகம்

இதேபோல் திருவள்ளூரை அடுத்த திருப்பந்தியூர் கிராமத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்ச நேயருக்கு 67 ஆயிரம் வடை மாலைகள் சாற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் திருப்பந்தியூர், வய லூர், கொட்டையூர், மப்பேடு, கண்ணூர், பண்ணூர், ஸ்ரீபெ ரும்புதூர், திருவள்ளூர், பேரம்பாக்கம், சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் நீ்ண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், பூஜைகளும் நடை பெற்றது. 1008 மிளகு வடையால் மாலை அணிவித்தும், பாதாம் முந்திரியால் தயாரிக்கப்பட்ட 5 கிலோ வெண்ணையை கொண்டு அலங்காரமும் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். பெண்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.